ETV Bharat / state

தருமபுரியில் ஆணவக்கொலை முயற்சி? எஸ்.பி அலுவலகத்தில் பெண் புகார்!

தருமபுரி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆணவப் படுகொலை செய்ய முயற்சிப்பவர்களிடம் இருந்து பாதுகாப்பு தரக் கோரி நாகராணி என்பவர் மனு அளித்துள்ளார்.

dharmapuri inter caste marriage issue
author img

By

Published : Aug 2, 2019, 10:19 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(23) என்பவரும் தாளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் காதல் திருமணம் செய்வதற்காக தங்களின் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அஜித்குமாரின் உறவினர்கள் தேடிவந்துள்ளனர். அப்போது பிரியாவின் உறவினர்கள் அஜித்குமாரின் உறவினர்களை சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்று அவர்களைத் தாக்கியாகத் தெரிகிறது.

அஜித்குமாரின் உறவினர்கள்

இந்நிலையில், அஜித்குமாரின் உறவினர் நாகராணி என்பவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் "எங்களையும் எங்கள் உறவினர்களையும், பிரியாவின் உறவினர்கள் சாதி ஆணவப்படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும். எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறிய பிரியா, அஜித்குமார் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து தங்களிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார்(23) என்பவரும் தாளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் காதல் திருமணம் செய்வதற்காக தங்களின் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அஜித்குமாரின் உறவினர்கள் தேடிவந்துள்ளனர். அப்போது பிரியாவின் உறவினர்கள் அஜித்குமாரின் உறவினர்களை சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்று அவர்களைத் தாக்கியாகத் தெரிகிறது.

அஜித்குமாரின் உறவினர்கள்

இந்நிலையில், அஜித்குமாரின் உறவினர் நாகராணி என்பவர் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் "எங்களையும் எங்கள் உறவினர்களையும், பிரியாவின் உறவினர்கள் சாதி ஆணவப்படுகொலை செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும். எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறிய பிரியா, அஜித்குமார் ஆகிய இருவரையும் கண்டுபிடித்து தங்களிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Intro:tn_dpi_01_intercast_marrage_problem_vis_7204444


Body:tn_dpi_01_intercast_marrage_problem_vis_7204444


Conclusion:தர்மபுரி அருகே சாதி ஆணவக் கொலை செய்ய முயற்சி செய்பவர்கள்மீது நடவடிக்கை கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு.  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பிக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த நாகராணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாதி ஆணவக் படு கொலை செய்ய முயற்சிப்பதாகவும்   தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அம்மனுவில் பிக்கம்பட்டி கிராமத்தில் நாவிதர் சமுகத்தினர் சுமார் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு நாகராணியின் உறவினர் மகன் அஜித் குமார் வயது 23 இவரும் தாளபள்ளம்  கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற வன்னிய சமுதாய பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களைத் தேடி பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தோம் அப்போது பெங்களூரில் தங்கி இருந்தபோது தாளபள்ளம் பகுதியை சேர்ந்த பாஸ்கர். செந்தில். தர்மலிங்கம். பென்னாகரம் பகுதியை சேர்ந்த முனியப்பன் மற்றும் ப்ரியாவின் தாய் தந்தை ஆகியோர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பெங்களூரில் இருந்து தங்களை  சமாதானம் பேச அழைத்து வந்து வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாகவும். பிரியாவின் உறவினர்கள் தாக்கியதால் தங்கள் உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தங்களது உறவினர் வித்தியாவின் உடல் பகுதிகளில் அடித்து துன்புறுத்தியதால் ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது என்றும் ஆகையால் எங்களையும் எங்கள் சமூகத்தை சார்ந்தவர்களையும் சாதி ஆணவ படு கொலை செய்ய முயற்சி செய்து வருவதாகவும் . தங்கள் சமுக மக்களை மிகக் கொடுமையாக தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.காதல் திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா மற்றும் அஜித் குமார் இருவரையும் கண்டுபிடித்து  தங்களிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.இருவேறு சமூக மக்கள் பிரச்சனை எனவே இப்பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.