ETV Bharat / state

எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ. 5,000 அபராதம் - தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம்!

author img

By

Published : Nov 13, 2019, 11:59 AM IST

தருமபுரி: இரு வேறு வழக்குகளில் ஒரு பெண் உள்ளிட்ட எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும்,  ரூ. 5,000 அபராதமும் விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

dharmapuri-court-life-judgement

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி கிராமத்தில், 2012 ஆகஸ்ட் மாதம் நிலப்பிரச்னை தொடர்பாக சென்னகிருஷ்ணன், சின்னானசாமி என்பவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சென்னகிருஷ்ணனின் அண்ணன் அக்குமாரி மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோர் சென்னகிருஷ்ணனுக்கு ஆதரவாக சின்னசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால், அக்குமாரி மற்றும் சதீஷ் ஆகியோரை குத்தியுள்ளார். இதில், சதீஷுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அக்குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் நிலத்தகராறில் அக்குமாரியை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக, சின்னசாமி, அவரது மனைவி கோவிந்தம்மாள், மகன்கள் ரஞ்சித், வசந்த ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். வசந்த் ஆஜராகாத நிலையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

இதேபோல், பென்னாகரம் அடுத்த கூக்குட்டமருதஹள்ளியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், 2018 பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், மாரியம்மன் கோயில் அருகே தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதில் அலறியடித்து ஓடிய சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை சக்திவேல் தனது உறவினர்களுடன், நள்ளிரவில் பெருமாள் வீட்டிற்கு வந்து, அவரை அழைத்துச் சென்று பள்ளி மைதானத்தில் வைத்து பலமாக தாக்கி அடித்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில், பெருமாளை அடித்துக் கொலை செய்ததற்காக, சிறுமியின் தந்தை சக்திவேல், சக்திவேலின் உறவினர்கள் முருகன், அருண், கமலேசன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:

‘தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ - ஜி.கே. மணி

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி கிராமத்தில், 2012 ஆகஸ்ட் மாதம் நிலப்பிரச்னை தொடர்பாக சென்னகிருஷ்ணன், சின்னானசாமி என்பவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சென்னகிருஷ்ணனின் அண்ணன் அக்குமாரி மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோர் சென்னகிருஷ்ணனுக்கு ஆதரவாக சின்னசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது சின்னசாமி கையில் வைத்திருந்த கத்தியால், அக்குமாரி மற்றும் சதீஷ் ஆகியோரை குத்தியுள்ளார். இதில், சதீஷுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அக்குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணையின் முடிவில் நிலத்தகராறில் அக்குமாரியை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக, சின்னசாமி, அவரது மனைவி கோவிந்தம்மாள், மகன்கள் ரஞ்சித், வசந்த ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். வசந்த் ஆஜராகாத நிலையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

இதேபோல், பென்னாகரம் அடுத்த கூக்குட்டமருதஹள்ளியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், 2018 பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், மாரியம்மன் கோயில் அருகே தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதில் அலறியடித்து ஓடிய சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை சக்திவேல் தனது உறவினர்களுடன், நள்ளிரவில் பெருமாள் வீட்டிற்கு வந்து, அவரை அழைத்துச் சென்று பள்ளி மைதானத்தில் வைத்து பலமாக தாக்கி அடித்துக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில், பெருமாளை அடித்துக் கொலை செய்ததற்காக, சிறுமியின் தந்தை சக்திவேல், சக்திவேலின் உறவினர்கள் முருகன், அருண், கமலேசன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:

‘தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்’ - ஜி.கே. மணி

Intro:தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரு வேறு வழக்குகளில் ஒரு பெண் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பு.Body:தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரு வேறு வழக்குகளில் ஒரு பெண் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பு.Conclusion:தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரு வேறு வழக்குகளில் ஒரு பெண் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து தீர்ப்பு.

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி கிராமத்தில், கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் நிலப்பிரச்சினை தொடர்பாக சென்ன கிருஷ்ணன் என்பவருக்கும், சின்னானசாமி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது சென்னகிருஷ்ணனின் அண்ணன் அக்குமாரி மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோர் சென்னகிருஷ்ணனுக்கு ஆதரவாக சின்னசாமி இடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது கையில் வைத்திருந்த கத்தியால் சின்னசாமி, அக்குமாரி மற்றும் சதீஷ் இருவரையும் குத்தியுள்ளார். இதில், சதீஷ்க்கு லேசான் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அக்குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கம்பைநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் முடிவில் நிலத்தகராறில் அக்குமாரியை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக, சின்னசாமி, அவரது மனைவி கோவிந்தம்மாள், மகன்கள் ரஞ்சித், வசந்த ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். இன்று நீதிமன்றத்திற்கு வசந்த் ஆஜராகாத நிலையில் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதேப்போல், பென்னாகரம் அடுத்த கூக்குட்டமருதஹள்ளி சேர்ந்த பெருமாள் என்பவர், கடந்த 2018 பிப்ரவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம், மாரியம்மன் கோயில் அருகே தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதில் அலறியடித்து ஓடிய சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை சக்திவேல் தனது உறவினர்களுடன், நள்ளிரவில் பெருமாள் வீட்டிற்கு வந்து, அவரை அழைத்துச் சென்று பள்ளி மைதானத்தில் நான்கு பேரும் இணைந்து பலமாக தாக்கி அடித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பென்னாகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கின் முடிவில்,
பெருமாளை அடித்து கொலை செய்ததற்காக, சிறுமியின் தந்தை சக்திவேல், சக்திவேலின் உறவினர்கள் முருகன், அருண், கமலேசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பளித்தார். மேலும் அபராதத் தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இன்று இரு வேறு வழக்குகளில் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பெண் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.