ETV Bharat / state

தருமபுரியில் 15 நாட்களில் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கிய கலெக்டர்!

author img

By

Published : Nov 14, 2022, 10:25 PM IST

அரூர் பகுதியைச் சேர்ந்த 20 இருளர் இன மக்களுக்கு மனு வழங்கிய 15 நாட்களில் பட்டா வழங்கிய தருமபுரி மாவட்ட ஆட்சியரின் செயல் பலரிடம் பாராட்டை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியில் 15 நாட்களில் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கிய ஆட்சியர்
தருமபுரியில் 15 நாட்களில் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கிய ஆட்சியர்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி கிராமத்தைச்சார்ந்த இருளர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, மனு குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க அரூர் வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து உத்தரவின் அடிப்படையில் மனுக்களை பரிசீலனை செய்து அவர்களுக்கு, இன்று (நவ.14) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தருமபுரியில் 15 நாட்களில் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கிய ஆட்சியர்

மனு கொடுத்து 15 நாட்களிலேயே தங்கள் பிரச்னையைத் தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: துபாய் நூலகத்திற்கு முதலமைச்சர் சார்பில் 1000 நூல்கள் கொடை!

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி கிராமத்தைச்சார்ந்த இருளர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, மனு குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க அரூர் வருவாய் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து உத்தரவின் அடிப்படையில் மனுக்களை பரிசீலனை செய்து அவர்களுக்கு, இன்று (நவ.14) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 20 இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தருமபுரியில் 15 நாட்களில் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்கிய ஆட்சியர்

மனு கொடுத்து 15 நாட்களிலேயே தங்கள் பிரச்னையைத் தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: துபாய் நூலகத்திற்கு முதலமைச்சர் சார்பில் 1000 நூல்கள் கொடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.