ETV Bharat / state

குழந்தைத் திருமணத்திலிருந்த சிறுமியை மீட்டவர்கள் மீது தாக்குதல்! - child marriage

தருமபுரி: பென்னாகரம் அருகே நடக்கவிருந்து குழந்தை திருமணத்திலிருந்து 17 வயது சிறுமியை மீட்ட சைல்டு லைன் அமைப்பினர் மீது அச்சிறுமியின் தந்தை உள்பட உறவினர்கள் தாக்குதல் நடத்தினர்.

child marriage
author img

By

Published : May 11, 2019, 12:07 PM IST

பென்னாகரம் அடுத்த பவளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம்-சசிகலா தம்பதி. இவர்களின் 17 வயது மகளுக்கு திருமணம் செய்ய முயற்சிப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1077 என்ற தொலைபேசி எண்ணுக்குப் புகார் வந்துள்ளது.

இப்புகார் சைல்டு லைன் அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டு திருமணம் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த ஊரக நல அலுவலர்கள் சென்றுள்ளனர்.

அங்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த 17 வயது சிறுமிக்கு சைல்டு லைன் அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கி அவரை மீட்டு வள்ளலார் குழந்தைகள் காப்பகத்திற்கு பேருந்து மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

குழந்தைத் திருமணத்திலிருந்த சிறுமியை மீட்டவர்கள் மீது தாக்குதல்

இதனை அறிந்த சிறுமியின் தந்தை சிவலிங்கம் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களோடு இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்யும் பேருந்தைத் துரத்திச் சென்று மாவட்ட ஆட்சியர் இல்லம் அருகே பேருந்தை நிறுத்தி சைல்டுலைன் அலுவலர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயமடைந்த சைல்டு லைன் உறுப்பினர் வைத்தீஸ்வரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் தற்போது மீண்டும் குழந்தை திருமணம் தலை தூக்கியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பென்னாகரம் அடுத்த பவளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம்-சசிகலா தம்பதி. இவர்களின் 17 வயது மகளுக்கு திருமணம் செய்ய முயற்சிப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1077 என்ற தொலைபேசி எண்ணுக்குப் புகார் வந்துள்ளது.

இப்புகார் சைல்டு லைன் அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டு திருமணம் நடைபெறும் குறிப்பிட்ட பகுதிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த ஊரக நல அலுவலர்கள் சென்றுள்ளனர்.

அங்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த 17 வயது சிறுமிக்கு சைல்டு லைன் அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கி அவரை மீட்டு வள்ளலார் குழந்தைகள் காப்பகத்திற்கு பேருந்து மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

குழந்தைத் திருமணத்திலிருந்த சிறுமியை மீட்டவர்கள் மீது தாக்குதல்

இதனை அறிந்த சிறுமியின் தந்தை சிவலிங்கம் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களோடு இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்யும் பேருந்தைத் துரத்திச் சென்று மாவட்ட ஆட்சியர் இல்லம் அருகே பேருந்தை நிறுத்தி சைல்டுலைன் அலுவலர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயமடைந்த சைல்டு லைன் உறுப்பினர் வைத்தீஸ்வரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் தற்போது மீண்டும் குழந்தை திருமணம் தலை தூக்கியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தருமபுரி அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய சைல்டு அமைப்பை சார்ந்தவர்கள் தாக்கி பதினோராம் வகுப்பு சிறுமியை கடத்திய பெற்றோர்.   தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பவளத்தூர்  கிராமத்தை சேர்ந்த  சிவலிங்கம் சசிகலா தம்பதியின் பதினேழு வயது மகளுக்கு திருமணம் செய்ய முயற்சிப்பதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் வந்துள்ளது. இப்புகார் சைல்டு லைன் அமைப்பிற்கு தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட திருமணம் நடைபெறும் பகுதிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சார்ந்த ஊரக நல அலுவலர்கள் சென்றுள்ளனர். அங்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த 17 வயது சிறுமிக்கு சைல்டு லைன் அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கி சிறுமியை மீட்டு வள்ளலார் குழந்தைகள் காப்பகத்திற்கு பேருந்து மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.சிறுமியை சைல்டு லைன் அமைப்பினர் அழைத்துச் செல்வதை அறிந்த சிறுமியின் தந்தை  சிவலிங்கம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களோடு இருசக்கர வாகனத்தில் அவர்கள் பயணம் செய்யும் பேருந்தை துரத்திச் சென்று மாவட்ட ஆட்சியர் இல்லம் அருகே பேருந்தை நிறுத்தி சைல்டுலைன் அலுவலர்களை கடுமையாக  தாக்கி விட்டு சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோரால் தாக்குதலால் காயமடைந்த  சைல்ட் லைன் உறுப்பினர் வைத்தீஸ்வரி அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.தருமபுரி மாவட்டத்தில் தற்போது மீண்டும் குழந்தை திருமணம் தலைதூக்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.