ETV Bharat / state

நிர்மலா சீதாராமனுக்கு திருமாவளவன் கண்டனம்

author img

By

Published : Feb 3, 2020, 7:28 AM IST

கடலூர்: சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி சிந்து நாகரீகம் என குறிப்பிட்டு பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

Thirumavalavan speech about Nirmala Sitharaman
Thirumavalavan speech about Nirmala Sitharaman

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முதல் வருகிற 8ஆம் தேதி வரை ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமைதாங்கி முதல் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும், மாநிலம் தழுவிய அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தோழமைக் கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறது.

பட்ஜெட் என்பது வெறும் அலங்காரம் ஆரவாரம் உள்ள ஒரு உரையாகத்தான் அமைந்திருக்கிறது. அதல பாதாளத்தில் சரிந்து கிடக்கக்கூடிய பொருளாதாரத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு எந்த வகையிலும் இது பயனளிக்காத ஒரு பட்ஜெட் இதுவாகும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, பொருளாதார வளத்தை எல்லாம் தாண்டி வரலாறு பண்பாடு என்ற வகையில் அவருடைய உரை மூன்று மணி நேர உரையாக அமைந்தது. அதுவே இதுவரையில் இல்லாத ஒன்று.

வரலாற்றைத் திரிக்கும் வேலை. சிந்து சமவெளி, ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி சிந்து சிவிலிஷயேசன் என்று சொல்லக்கூடிய மிக மோசமான ஒரு வரலாற்றுத் திரிபை அவர் தனது உரையில் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றார்.

இதையும் படிங்க: ரஜினி பட 'பஞ்ச்' பேசும் அழகிரி: செல்போனில் இருவரும் பேசியது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முதல் வருகிற 8ஆம் தேதி வரை ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமைதாங்கி முதல் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும், மாநிலம் தழுவிய அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தோழமைக் கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறது.

பட்ஜெட் என்பது வெறும் அலங்காரம் ஆரவாரம் உள்ள ஒரு உரையாகத்தான் அமைந்திருக்கிறது. அதல பாதாளத்தில் சரிந்து கிடக்கக்கூடிய பொருளாதாரத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு எந்த வகையிலும் இது பயனளிக்காத ஒரு பட்ஜெட் இதுவாகும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, பொருளாதார வளத்தை எல்லாம் தாண்டி வரலாறு பண்பாடு என்ற வகையில் அவருடைய உரை மூன்று மணி நேர உரையாக அமைந்தது. அதுவே இதுவரையில் இல்லாத ஒன்று.

வரலாற்றைத் திரிக்கும் வேலை. சிந்து சமவெளி, ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி சிந்து சிவிலிஷயேசன் என்று சொல்லக்கூடிய மிக மோசமான ஒரு வரலாற்றுத் திரிபை அவர் தனது உரையில் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றார்.

இதையும் படிங்க: ரஜினி பட 'பஞ்ச்' பேசும் அழகிரி: செல்போனில் இருவரும் பேசியது என்ன?

Intro:சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி சிந்து நாகரீகம் என குறிப்பிட்டு பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம் கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி பேட்டி.
Body:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று 2 ந் தேதி முதல் 8 ந் தேதி வரை ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடலூரில் ஒரு கோடி நபரிடம் கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன் கூறியதாவது:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் இன்று தமிழகம் தழுவிய அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தோழமைக் கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறது கோடிக்கணக்கான கையெழுத்துக்களை பெற்று குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒப்படைக்கிறோம் இந்த கையெழுத்து இயக்கம் இன்றிலிருந்து எட்டாம் தேதி வரையில் தொடர்கிறது CAA என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு சட்டம் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த கூடிய மிக மோசமான ஒரு சட்டம் ஆகவே இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று நாடே கொந்தளித்து போராட்ட களத்தில் இறங்கியிருக்கிறது தமிழ்நாட்டில் திமுக தலைவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான இந்த கூட்டணி கட்சி வலுவாக எதிர்கொள்வோம் என்ற சட்டத்தை திரும்பப்பெறுகிற வரையில் NPR, NRC ஆகியவற்றை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உறுதியளிக்க வரையில் எமது போராட்டம் தொடரும் இதை இரண்டாவது கட்டமாக கூட்டணியின் சார்பில் நடைபெறுகிற ஒரு மாபெரும் அறப் போராட்டம்

பட்ஜெட் என்பது வெறும் அலங்காரம் ஆரவாரம் உள்ள ஒரு உரையாகத்தான் அமைந்திருக்கிறது அதல பாதாளத்தில் சரிந்து கிடக்கக்கூடிய பொருளாதாரத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை அதேபோல விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு எந்த வகையிலும் இது பயனளிக்காத ஒரு பட்ஜெட் மேலும் எல்ஐசி என்கிற பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்கள் ஒட்டுமொத்தத்தில் மக்களை ஏமாற்றும் ஒரு பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நன்றி காட்டக்கூடிய விசுவாசம் காட்டக்கூடிய ஒரு பட்ஜெட் இதனால் இந்திய அரசியல் பொருளாதாரம் உயர்வதற்கு வாய்ப்பே இல்லை விழுந்து கிடக்கிற பொருளாதாரத்தை மீட்பதற்கான ஒரு சூழலே இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது

தமிழ் தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட கூடிய நிலையில் இல்லை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அவர்களின் ஆட்காட்டி விரலின் அசைவுகளுக்கு ஏற்ப இயங்கக்கூடிய ஒரு அரசாகவே இருக்கிறது அவர்கள் என்ன சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி ஒரு அரசாக தமிழக அரசு இருப்பது உள்ளபடியே வேதனைக்குரியதாகும் அடுத்த நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது பொருளாதார வளத்தை எல்லாம் தாண்டி வரலாறு பண்பாடு என்ற வகையில் அவருடைய உரை மூன்று மணி நேர உரை அமைந்தது அதுவே இதுவரையில் இல்லாத ஒன்று வரலாற்றைத் திரிக்கும் வேலை சிந்து சமவெளி நாகரிகம் ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி சிந்து சிவிலிஷயேசன் என்று சொல்லக்கூடிய மிக மோசமான ஒரு வரலாற்றுத் திரிபை அவர் தனது உரையில் குறிப்பிட்டார் இதை மிக வன்மையாக கண்டிக்கிறோம் வரலாற்று திரிபு மிகவும் ஆபத்தானது சனாதன கொள்கைகளை நோக்கி இந்த அரசு தீவிரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது அதற்கு இந்த நிதிநிலை அறிக்கை உரையும் ஒரு சான்றாகும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.