ETV Bharat / state

ஆற்றில் கொட்டப்பட்ட கழிவுகள் - பேரூராட்சி அலுவலர்கள் பணியிடை நீக்கம்!

கடலூர்: வெள்ளாற்றில் லாரிகள் மூலம் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, பேரூராட்சி அலுவலர்கள் இருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

author img

By

Published : Dec 4, 2019, 8:30 PM IST

Viral video of river waste dumping
Viral video of river waste dumping

கடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்களிலும் நீர் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில ஆறுகளின் தடுப்பணைகளைத் தாண்டி, உபரி நீர் கடலில் கலக்கிறது. மேலும் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், வெள்ளாற்றில் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை லாரி மூலம், வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் கொண்டுவந்து கொட்டுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆற்றில் கழிவுகள் கொட்டப்படும் காணொலி

இதனால் தண்ணீர் மாசுபடுவது மட்டும் இல்லாமல், அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் என்றும்; குப்பைக் கழிவுகளைக் கொட்டும் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடந்தால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ

கடலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்களிலும் நீர் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில ஆறுகளின் தடுப்பணைகளைத் தாண்டி, உபரி நீர் கடலில் கலக்கிறது. மேலும் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், வெள்ளாற்றில் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை லாரி மூலம், வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் கொண்டுவந்து கொட்டுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆற்றில் கழிவுகள் கொட்டப்படும் காணொலி

இதனால் தண்ணீர் மாசுபடுவது மட்டும் இல்லாமல், அந்தத் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் என்றும்; குப்பைக் கழிவுகளைக் கொட்டும் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடந்தால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

'வைகோ மட்டும் தான் தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க அரசியல்வாதி' - அமைச்சர் செல்லூர் ராஜூ

Intro:வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கொட்டிய குப்பை சமூக வலைதளங்களில் பரவியது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைBody:கடலூர்
டிசம்பர் 3,

கடலூரில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள் ஏரிகள் குளங்களிலும் நீர் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சில ஆறுகளின் தடுப்பணைகளை தாண்டி உபரி நீர் கடலில் கலக்கிறது. இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழையால் தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் திறந்துவிடப்பட்ட உபரி நீர் வெள்ளாற்றில் கரை புரண்டு ஓடுகிறது. வெள்ளாற்றில் தண்ணீர் வருவதை திட்டக்குடி மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்து விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் திட்டக்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் கழிவுகளை வெள்ளாற்றில் ஓடும் தண்ணீரில் கொண்டுவந்து லாரியில் கொட்டுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தண்ணீர் மாசுபடுவது மட்டும் இல்லாமல் அந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உறுவாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டும் பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சி பகுதிகளில் சேகரம் செய்த குப்பைகளை வள மீட்பு பூங்காவுக்கு கொண்டு சென்று குப்பைகளை தரம் பிரித்து உரமாக்காமல் வெள்ளாற்றில் சென்ற வெள்ள நீரில் விதிகளுக்கு முரணாக தொடர்புடைய
கொட்டப்பட்டதா பேரூராட்சி செயல் அலுவலர் காரணமாக வி.குணசேகரன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் கோ. ராதாகிருஷ்ணன்
ஆகியவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒப்பந்த அடிப்படையில்
பொது சுகாதார வாகனத்தை இயக்கிய ஓட்டுநர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடந்தால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்தார்.



Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.