ETV Bharat / state

"கரோனாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" - கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் வேண்டுகோள்!

author img

By

Published : May 19, 2021, 12:02 PM IST

கடலூர்: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என புதிய மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

"கரோனாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" -கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் வேண்டுகோள்!
"கரோனாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" -கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் வேண்டுகோள்!

கடலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக கே. பாலசுப்ரமணியம், பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

"கரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு கடலூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், "அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்குச் சென்றடைய பாடுபடுவேன்" என்றார்.

கடலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக கே. பாலசுப்ரமணியம், பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

"கரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு கடலூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும்.

மக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், "அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்குச் சென்றடைய பாடுபடுவேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.