ETV Bharat / state

தனிமைப்படுத்தப்பட்ட கடலூர் எம்பி!

author img

By

Published : May 3, 2020, 9:10 PM IST

கடலூர்: கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவரின் உறவினருடன் உரையாடியதற்காக கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் கடலூர் எம்பி!
தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் கடலூர் எம்பி!

கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் பண்ருட்டியில் வசித்து வருகிறார். பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தனது பேத்திக்குப் புற்றுநோய் சிகிச்சை பெற ஏதுவாக, மக்களவை உறுப்பினர் பரிந்துரைக் கடிதம் பெறுவதற்காக ரமேஷை நேற்று மாலை சந்தித்து கடிதம் பெற்றுச் சென்றுள்ளார்.

அவரிடம் கடிதம் பெற்றுவிட்டு, அந்தப் பெண் வீட்டிற்குச் சென்றபோது, அவருடையப் பேத்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்தச் சிறுமி கரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் சிறுமியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த வகையில், சிறுமியின் பாட்டி, கடலூர் மக்களவை உறுப்பினரைச் சந்தித்து உரையாடியதால், அவரும் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டவர் என்று வீட்டின் முன்பு நகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க...எப்படியெல்லாம் குவாரண்டனை என்ஜாய் பண்றாய்ங்க...!

கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் பண்ருட்டியில் வசித்து வருகிறார். பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தனது பேத்திக்குப் புற்றுநோய் சிகிச்சை பெற ஏதுவாக, மக்களவை உறுப்பினர் பரிந்துரைக் கடிதம் பெறுவதற்காக ரமேஷை நேற்று மாலை சந்தித்து கடிதம் பெற்றுச் சென்றுள்ளார்.

அவரிடம் கடிதம் பெற்றுவிட்டு, அந்தப் பெண் வீட்டிற்குச் சென்றபோது, அவருடையப் பேத்திக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அந்தச் சிறுமி கரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் சிறுமியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்த வகையில், சிறுமியின் பாட்டி, கடலூர் மக்களவை உறுப்பினரைச் சந்தித்து உரையாடியதால், அவரும் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டவர் என்று வீட்டின் முன்பு நகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இதையும் படிங்க...எப்படியெல்லாம் குவாரண்டனை என்ஜாய் பண்றாய்ங்க...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.