ETV Bharat / state

"சாராயம் குடித்து செத்தா ரூ.10 லட்சம் மாணவன் மரணத்திற்கு ரூ.2 லட்சம் தானா?" - கடலூர் அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 9:28 PM IST

கடலூரில் போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோவில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த நிலையில், 5பேர் காயமடைந்தனர். இதனையடுத்து பேருந்து வசதிக் கோரியும், உயிரிழந்த மாணவனுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து 1000-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கடலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கடலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கடலூர்: தேவனாம்பட்டினம் அரசு தந்தை பெரியார் கலை கல்லூரி மாணவ மாணவிகள் நேற்று முன்தினம்(அக்.11) கடலூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றபோது கடற்கரை சாலையில் ஆட்டோவின் குறுக்கே நாய் சென்றதால் நிலைத்தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்றாம் ஆண்டு B,Sc மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் நேற்று(அக்.12) உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து விபத்தினால், நேற்று(அக்.12) கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று (அக்.13) வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும், கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி கல்லூரியிலிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.

அப்போது காவல் துறையினர் மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் காவல் துறையினர் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பிற்காவும், மாணவ மாணவிகளை கட்டுப்படுத்தவும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு கருதி வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது.

தொடர்ந்து மாணவர்கள் உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அதிகரித்து தர வேண்டும் என்றும், கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். சாலையில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, டி.ஆர்.ஓ.ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இது குறித்து கல்லூரி மாணவர் கீர்த்தி கூறுகையில், "சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்த நபர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கும் தமிழ்நாடு அரசு, உயிரிழந்த கல்லூரி மாணவனின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் வழங்குகிறது. மாணவனின் குடும்பத்திற்கு, கல்லூரி மாணவன் உயிரிழப்புக்கு 2 லட்சம் போதாது. மாணவன் உயிர் இழப்பால் குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் கல்லூரி நேரத்தில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!

கடலூரில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கடலூர்: தேவனாம்பட்டினம் அரசு தந்தை பெரியார் கலை கல்லூரி மாணவ மாணவிகள் நேற்று முன்தினம்(அக்.11) கடலூர் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் சென்றபோது கடற்கரை சாலையில் ஆட்டோவின் குறுக்கே நாய் சென்றதால் நிலைத்தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்றாம் ஆண்டு B,Sc மைக்ரோ பயாலஜி படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 5 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் நேற்று(அக்.12) உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அளித்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து விபத்தினால், நேற்று(அக்.12) கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று (அக்.13) வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள், மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும், கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி கல்லூரியிலிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியாகச் சென்றனர்.

அப்போது காவல் துறையினர் மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் காவல் துறையினர் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்பிற்காவும், மாணவ மாணவிகளை கட்டுப்படுத்தவும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு கருதி வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது.

தொடர்ந்து மாணவர்கள் உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அதிகரித்து தர வேண்டும் என்றும், கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். சாலையில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, டி.ஆர்.ஓ.ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் கல்லூரி நேரத்தில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இது குறித்து கல்லூரி மாணவர் கீர்த்தி கூறுகையில், "சாராயம் குடித்துவிட்டு உயிரிழந்த நபர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கும் தமிழ்நாடு அரசு, உயிரிழந்த கல்லூரி மாணவனின் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் வழங்குகிறது. மாணவனின் குடும்பத்திற்கு, கல்லூரி மாணவன் உயிரிழப்புக்கு 2 லட்சம் போதாது. மாணவன் உயிர் இழப்பால் குடும்பம் நிற்கதியாய் நிற்கிறது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் கல்லூரி நேரத்தில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் 19 எம்பிபிஎஸ் இடங்கள் காலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.