ETV Bharat / state

கடலூரில் ஆறு நாட்களில் 22 பேருக்கு கரோனா

author img

By

Published : May 29, 2020, 11:34 AM IST

கடலூர் : நேற்று புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 443ஆக உயர்ந்துள்ளது.

கரோனா
கரோனா

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.

இதில் தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை மாநகராட்சி திணறி வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக கடலூரில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலைத் தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அம்மாவட்டத்தில் இதுவரை 439 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக நான்கு பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கடலூர், சிதம்பரம், விருதாச்சலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை மொத்தம் 420 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கடந்த ஆறு நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளா வந்த தமிழர்கள்... எல்லையில் விட்டுச்சென்ற அலுவலர்கள்!

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.

இதில் தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை மாநகராட்சி திணறி வரும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக கடலூரில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவலைத் தடுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அம்மாவட்டத்தில் இதுவரை 439 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக நான்கு பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கடலூர், சிதம்பரம், விருதாச்சலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை மொத்தம் 420 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கடந்த ஆறு நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளா வந்த தமிழர்கள்... எல்லையில் விட்டுச்சென்ற அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.