ETV Bharat / state

"எல்லாம் முடிஞ்சு போச்சு" - அதிமுக கூட்டணி குறித்து வானதி சீனிவாசன் பதில்!

Vanathi Srinivasan press meet: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து வி.பி துரைசாமி பேசியிருந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு ‘எல்லாம் முடிஞ்சு போச்சு’ என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 12:23 PM IST

Vanathi Srinivasan press meet
வானதி சீனிவாசன் பேட்டி
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக எம்எல் ஏவானதி சீனிவாசன் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது, "நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3 ஆயிரத்து 749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்கவில்லை என சொன்னார். அவரது கோரிக்கையும் கேட்கப்பட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்னைகளுக்காக நிதியமைச்சரைச் சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், கோவையில் உள்ள SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும், அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. மேலும், கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்தார்.

அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை. தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும்” என்றார். இதனையடுத்து, நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை என கூறிய அவர், மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம் என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் முடிவில், வானதி சீனிவாசனிடம் அதிமுக கூட்டணி குறித்து வி.பி துரைசாமி பேசியிருந்தது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், ‘எல்லாம் முடிஞ்சு போச்சு’ என பதிலளித்தவாறு சென்றார்.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் கொங்கு பாரம்பரிய கும்மி நடனம்!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இன்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அவரை பாஜக எம்எல் ஏவானதி சீனிவாசன் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது, "நேற்று ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு 3 ஆயிரத்து 749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய நிகழ்வில் ஒருவர் கடன் கிடைக்கவில்லை என சொன்னார். அவரது கோரிக்கையும் கேட்கப்பட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பொள்ளாச்சி ஜெயராமன், அமல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்னைகளுக்காக நிதியமைச்சரைச் சந்தித்தனர். இது அரசு நிகழ்வு என்பதால், அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேலும், கோவையில் உள்ள SIDBI வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும், அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று நடந்த தனியார் கல்லூரி நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. மேலும், கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்தார்.

அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை. தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும்” என்றார். இதனையடுத்து, நேற்று சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து தெரியவில்லை என கூறிய அவர், மாநிலத் தலைவர் இல்லாமல் கோட்டத் தலைவர்கள் கூட்டம் நடத்தலாம் என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் முடிவில், வானதி சீனிவாசனிடம் அதிமுக கூட்டணி குறித்து வி.பி துரைசாமி பேசியிருந்தது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், ‘எல்லாம் முடிஞ்சு போச்சு’ என பதிலளித்தவாறு சென்றார்.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் கொங்கு பாரம்பரிய கும்மி நடனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.