ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 28, 2022, 8:28 PM IST

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் சரக்கு ஆட்டோ வாகனம் மற்றும் தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட விபத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி
பொள்ளாச்சி அருகே ஏற்பட்ட விபத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. கட்டுமான பணி செய்து வருகிறார். இவர் இன்று (செப்.28) வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக தனது சரக்கு ஆட்டோவில் கட்டுமான பொருள்களை ஏற்றிக்கொண்டு வேலையாள்களுடன் பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் நோக்கி சென்றார்.

பாலக்காடு சாலையில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்களை ஒரு வழி பாதையில் சென்று வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்தது.

அந்த பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் பேருந்தில் பயணம் செய்த பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பின்னர், அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து இளைஞர் முன்னணி நகரத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு. கட்டுமான பணி செய்து வருகிறார். இவர் இன்று (செப்.28) வழக்கம்போல் பணிக்குச் செல்வதற்காக தனது சரக்கு ஆட்டோவில் கட்டுமான பொருள்களை ஏற்றிக்கொண்டு வேலையாள்களுடன் பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் நோக்கி சென்றார்.

பாலக்காடு சாலையில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்களை ஒரு வழி பாதையில் சென்று வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான கோபாலபுரம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி அதிவேகமாக வந்தது.

அந்த பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி, சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் பேருந்தில் பயணம் செய்த பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பின்னர், அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து இளைஞர் முன்னணி நகரத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.