ETV Bharat / state

திருநங்கை கொலை வழக்கு - தனிப்படை அமைத்து காவல் துறை விசாரணை!

author img

By

Published : Oct 23, 2020, 12:27 AM IST

கோவை: சாய்பாபா காலனி அருகே நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் திருநங்கை ஒருவரை வெட்டிக் கொன்று டிரம்மில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

transgender-murder-case-police-set-up-personal-investigation
transgender-murder-case-police-set-up-personal-investigation

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் வசித்தவர் திருநங்கை சங்கீதா(55). இவர் நேற்று (அக்.21) கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் இருந்த ஒரு ட்ரம்மிலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று டிரம்மில் இருந்து உடல் கண்டெடுக்கும்போது, ட்ரம் முழுவதும் உப்பு கொட்டி வைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு உப்பைக் கொட்டி செல்லும் கும்பல் எவரேனும் கோவையில் உள்ளனரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடல் அழுகிய பின்னர் துர்நாற்றம் வீசாமல் இருக்க உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இல்லையெனில் தடயங்களை மறைக்கக் கூட உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் வசித்தவர் திருநங்கை சங்கீதா(55). இவர் நேற்று (அக்.21) கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் இருந்த ஒரு ட்ரம்மிலிருந்து கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 3 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று டிரம்மில் இருந்து உடல் கண்டெடுக்கும்போது, ட்ரம் முழுவதும் உப்பு கொட்டி வைக்கப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு உப்பைக் கொட்டி செல்லும் கும்பல் எவரேனும் கோவையில் உள்ளனரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடல் அழுகிய பின்னர் துர்நாற்றம் வீசாமல் இருக்க உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இல்லையெனில் தடயங்களை மறைக்கக் கூட உப்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கும்மிடிப்பூண்டியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.