கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணை, கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இது கேரளா அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தமிழ்நாடு அரசுதான் பராமரிப்பு செலவுகளைச் செய்து வருகிறது. சிறுவாணி அணையில் வறட்சிக் காலங்களில் தண்ணீர் எடுக்கப் பயன்படும் நிலத்தின் அடியிலுள்ள ஒரு குழாயை கேரள அரசு கடந்த 2014ஆம் ஆண்டு மூடியது.
இந்நிலையில், மற்றொரு குழாயை மூடும் பணியை கேரள அரசு தற்போது செய்து வருகிறது. இது குறித்த செய்தி நேற்று ஈடிவி பாரத்தில் வெளியானது. இதனையடுத்து வறட்சிக் காலங்களில் தண்ணீர் எடுக்கப் பயன்படும் குழாயை அடைக்கும் கேரள அரசின் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.
![கோவை மாவட்டச் செய்திகள் தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் சிறுவாணி அணை சிறுவாணி அணை விவகாரம் siruvani dam issue siruvani dam ramakrishnan thanthai periyar dravidar kazhagam தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-siruvani-dam-kuramakirushnan-petition-visu-7208104_27052020125018_2705f_1590564018_318.jpg)