ETV Bharat / state

கோவையில் பயங்கரம்: பெற்ற மகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை!

author img

By

Published : Aug 12, 2020, 7:15 PM IST

கோவை: அருகம்பாளையம் பகுதியில் குடி போதையில் சொத்து கேட்டு தொடர்ந்து தகராறு செய்து வந்த மகனை, மரம் வெட்டும் கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

பழனிச்சாமி
பழனிச்சாமி

கோவை மாவட்டம் பொன்னே கவுண்டன் புதூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. டெம்போ ஓட்டுநரான இவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவந்தார். மதுவுக்கு அடிமையான பழனிச்சாமி தனது தந்தை வேலுச்சாமியிடம், சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதித் தருமாறு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (11.08.20) பழனிச்சாமி குடித்துவிட்டு தனது தந்தையுன் சண்டையிட்டுள்ளார். பின் பழனிச்சாமி உறங்கச் சென்றுள்ள நிலையில், இன்று (12.08.20) அதிகாலை 3 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் பழனிச்சாமியை மரம் வெட்டும் கோடாரியால் வேலுச்சாமி வெட்டிக் கொன்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்தோர் சத்தம் போட்டதை கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்துள்ளனர், பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

பின் இது குறித்து உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வேலுச்சாமியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கோடாரியை கைப்பற்றினர். இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக பழனிச்சாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதையும் படிங்க:
தனியார் விடுதி ஊழியர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் குத்திக் கொ
லை

கோவை மாவட்டம் பொன்னே கவுண்டன் புதூர் அடுத்த அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. டெம்போ ஓட்டுநரான இவர், தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவந்தார். மதுவுக்கு அடிமையான பழனிச்சாமி தனது தந்தை வேலுச்சாமியிடம், சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதித் தருமாறு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (11.08.20) பழனிச்சாமி குடித்துவிட்டு தனது தந்தையுன் சண்டையிட்டுள்ளார். பின் பழனிச்சாமி உறங்கச் சென்றுள்ள நிலையில், இன்று (12.08.20) அதிகாலை 3 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் பழனிச்சாமியை மரம் வெட்டும் கோடாரியால் வேலுச்சாமி வெட்டிக் கொன்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்தோர் சத்தம் போட்டதை கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்துள்ளனர், பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

பின் இது குறித்து உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வேலுச்சாமியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கோடாரியை கைப்பற்றினர். இதனையடுத்து உடற்கூறாய்வுக்காக பழனிச்சாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதையும் படிங்க:
தனியார் விடுதி ஊழியர்களுக்கு இடையே மோதல்: ஒருவர் குத்திக் கொ
லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.