ETV Bharat / state

Criticism against GST: ஜிஎஸ்டி வரி சட்டம்தான் தொழில்களை முடக்குகிறது - ஜி. ராமகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Criticism against GST: கோவை: ஜிஎஸ்டி வரிச்சட்டம்தான் தொழில்களை முடக்குகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ramakrishnan-comments-on-gst
author img

By

Published : Sep 14, 2019, 8:19 AM IST

Criticism against GST: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கோப்மா, டாக்ட் போன்ற அமைப்பின் நிர்வாகிகள், மகேந்திரா பம்ஸ் நிறுவன உரிமையாளர் மகேந்திர ராமதாஸ், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ஜிஎஸ்டி வரிச்சட்டம்தான் தொழில்களை முடக்குகின்றது எனவும், செப்டம்பர் 20ஆம் தேதி கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். போராட்டத்திற்கு தயாராவோம் என்ற எச்சரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்தும் மாநாடாக இது இருக்கும் எனவும், ஜிஎஸ்டி கவுன்சிலில் சரியான முடிவு இல்லை என்றால் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

CPIM ramakrishnan-comments-on-gst

இதனை தொடர்ந்து கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில், பஞ்சாலை தொழிலை பாதுகாக்க பஞ்சின் விலை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க வேண்டும், காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஊழல் படிந்த நிறுவனமாக மாறி இருக்கிறது, அதன் நிர்வாக அமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்கப்படவேண்டும், ஆண்டுக்கு 2 கோடி வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக அறிவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இதனைதொடர்ந்து மாநாட்டில் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், ஒரு துறையில் ஏற்பட்ட சரிவு அடுத்தடுத்து வேறு துறைகளுக்கு பரவுவதாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார். ஜிடிபி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும், இது போன்ற சூழலில் வரி விதிக்க முடியாமல் வெளிநாட்டில் கடன் வாங்க ஆட்சியாளர்கள் திட்டமிடுவதாகவும் சாடினார். பகுதி பகுதியாக வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறிய அவர், இது தொடரும் போது, இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் இழக்கும் சூழல் மிக விரைவில் ஏற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Criticism against GST: கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கோப்மா, டாக்ட் போன்ற அமைப்பின் நிர்வாகிகள், மகேந்திரா பம்ஸ் நிறுவன உரிமையாளர் மகேந்திர ராமதாஸ், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ஜிஎஸ்டி வரிச்சட்டம்தான் தொழில்களை முடக்குகின்றது எனவும், செப்டம்பர் 20ஆம் தேதி கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார். போராட்டத்திற்கு தயாராவோம் என்ற எச்சரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்தும் மாநாடாக இது இருக்கும் எனவும், ஜிஎஸ்டி கவுன்சிலில் சரியான முடிவு இல்லை என்றால் போராடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

CPIM ramakrishnan-comments-on-gst

இதனை தொடர்ந்து கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில், பஞ்சாலை தொழிலை பாதுகாக்க பஞ்சின் விலை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க வேண்டும், காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஊழல் படிந்த நிறுவனமாக மாறி இருக்கிறது, அதன் நிர்வாக அமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்கப்படவேண்டும், ஆண்டுக்கு 2 கோடி வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக அறிவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இதனைதொடர்ந்து மாநாட்டில் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், ஒரு துறையில் ஏற்பட்ட சரிவு அடுத்தடுத்து வேறு துறைகளுக்கு பரவுவதாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பபடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார். ஜிடிபி தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாகவும், இது போன்ற சூழலில் வரி விதிக்க முடியாமல் வெளிநாட்டில் கடன் வாங்க ஆட்சியாளர்கள் திட்டமிடுவதாகவும் சாடினார். பகுதி பகுதியாக வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகக் கூறிய அவர், இது தொடரும் போது, இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் இழக்கும் சூழல் மிக விரைவில் ஏற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Intro:பொருளாதார நெருக்கடியில் தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை
சரி செய்ய மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் மாறுதல் இல்லை என்றால் அரசுகளுக்கு நிர்பந்தம் கொண்டு வர வரும் டிசம்பர் 13 ம் தேதி வெள்ளிக்கிழமை கோவையில் பந்த் நடத்துவது என சி.ஐ.டி.யு சார்பில் நடத்தப்பட்ட கோவை தொழில் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Body:
கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிஐடியு அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகின்றது.சிஐடியு சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் கோப்மா,
டாக்ட் போன்ற அமைப்பின் நிர்வாகிகள் , மகேந்திரா பம்ஸ் நிறுவன உரிமையாளர் மகேந்திர ராமதாஸ், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவர் சௌந்தராஜன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.மாநாட்டை துவக்கி வைத்து பேசிய ஜி.ராமகிருஷ்ணன் ,
ஜி.எஸ்.டி வரி சட்டம்தான் தொழில்களை முடக்குகின்றது எனவும்,
செப் 20 ம் தேதி கோவாவில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூடுகின்றது எனவும், இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அனுப்பபடும் எனவும் தெரிவித்தார்.
போராட்டத்திற்கு தயாராவோம் என்ற எச்சரிக்கையை மத்திய அரசுக்கு உணர்த்தும் மாநாடாக இது இருக்கும் எனவும்,ஜி.எஸ்.டி கவுன்சிலில் சரியான முடிவு இல்லை என்றால் போராடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்தார்.

ஜி. ராமகிருஷ்ணன் சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர்

இதனை தொடர்ந்து கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிந்தார்.அப்போது
பஞ்சாலை தொழிலை பாதுகாக்க பஞ்சின் விலை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றி அமைக்க வேண்டும்,காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஊழல் படிந்த ஸ்தாபனமாக மாறி இருக்கின்றது,அதன் நிர்வாக அமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டும்,
ஆண்டுக்கு 2 கோடி வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாக அறிவிக்கப்பட வேண்டும்
என்பன உட்பட பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தார்.
மேலும் மின் வெட்டு பிரச்சினையின் போது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஓன்று கூடியவை போல மீண்டும் ஒன்று கூட வேண்டியிருக்கும் என தெரிவித்த அவர் தொழில்கள் பாதிப்பை
சரி செய்யும் படியாக
மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் மாறுதல் இல்லை என்று சொன்னால் அரசுகளுக்கு நிர்பந்தம் கொண்டு வர வரும் டிசம்பர் 13 ம் தேதி வெள்ளிக்கிழமை கோவை நகரம் ஸ்தம்பிக்கும் வகையில் பந்த் நடத்தப்படும் எனவும் தீர்மானத்தை வாசித்தார்.

பி.ஆர்.நடராஜன் கோவை மக்களவை உறுப்பினர், சி.பி.எம் மாநில குழு உறுப்பினர்

இதனை தொடர்ந்து பேசிய மகேந்திர பம்ஸ் உரிமையாளர் மகேந்திர ராமதாஸ்,பொருளாதாரம் உயர்ந்து இருப்பதுடன் பிரச்சினையும் உயர்ந்து இருக்கின்றது என தெரிவித்தார்.ஜி.எஸ்.டி வேண்டும் என பல ஆண்டுகளாக கேட்டது தொழில் அமைப்புகள்தான் என கூறிய அவர்,எங்கள் தலையில் நாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டோம், ஜி.எஸ்.டி இந்த ரூபத்தில் வரும் என எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.
வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாமல் இனி தொழில் நடத்த முடியாது என கூறிய அவர்,அவர்களுக்கு தங்கும் வசதிகளை அரசுகள் செய்து வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
30 ஆண்டுகள் இருந்த தொழில் நிலைமை இனி இருக்குமா என சொல்ல முடியாது என கூறிய அவர்,
தொழிற்சங்கத்தினரின் முயற்சிக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் தொழிலதிபர் மகேந்திரராமதாஸ் தெரிவித்தார்.


இதனைதொடர்ந்து மாநாட்டில் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் ,
ஓரு துறையில் ஏற்பட்ட சரிவு அடுத்தடுத்து வேறு துறைகளுக்கு பரவுகின்றது எனவும்,ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
ஆட்டோமொபைல் பாகங்கள் 45 சதவீதம் வரை தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது எனவும்,பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் போது அதை நம்பி இருக்கும் சிறு நிறுவனங்களும் பார்க்கப்படுகின்றது எனவும்,நாடாளுமன்ற தேர்தலின் போது தொழில் பிரச்சினைகளை முன் வைத்த போது நாடு, நாட்டிபற்றி என பேசி அதை கவனிக்காமல் விட்டுவிட்டனர் எனவும் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி கொண்டுவந்தால் நாடு முழுவதும் ஒரே சந்தையாக கொண்டுவந்துவிடலாம் என அவர்கள் நினைத்தார்கள் எனவும் ஆனால் தற்போதைய குளறுபடிகளால்
ஜி.எஸ்.டி வரி விதிப்பில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எதிர்பார்த்த வரியை பெற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜி.டி.பி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது என கூறிய அவர் , இது போன்ற சூழ்நிலையில் வரி விதிக்க முடியாமல் வெளிநாட்டில் கடன் வாங்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.பகுதி பகுதியாக வேலை இழப்பு ஏற்பட்டு வருகின்றது எனவும் இது தொடரும் போது, இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் இழக்கும் சூழ்நிலை ஏற்பட இருக்கின்றது எனவும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தெரிவித்தார்.



இந்த மாநாட்டில் டேக்ட், கோப்மா உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தீர்மானங்களை ஆதரித்து பேசினர்.இந்த மாநாட்டில் சி.ஐ.டி.யு அமைப்பை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.