ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட அண்ணாமலை!

author img

By

Published : Dec 24, 2022, 11:11 PM IST

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பாகாது என்றும் பிஜிஆர் போன்ற தனியார் நிறுவனத்திற்காகவே இம்மாதிரியான விலையேற்றம் எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
எகிறும் மின் கட்டணம்; வெள்ளை அறிக்கை தர அரசு தயாரா? - அண்ணாமலை

கோவை: இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் மெகா பட்டய கணக்காளர்களின் மாணவர் மாநாடு (Mega Chartered Accountants Student Conference) கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இன்று (டிச.24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை குறித்து பேசினார். அப்போது அவர், 'இந்த மாணவர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி. நாடே உங்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். 9 பிஸ்னர்ஸ் கிளஸ்டர்ஸ்க்கு (Business Clusters) கோவை தாய் வீடாக உள்ளது.

பெரும்பான்மையானவர்கள் தோல்வியில் இருந்து வந்துள்ளனர். ஹீமேன் போல பறந்தோ, இயேசுநாதர் போல தண்ணீரில் நடந்திடவோ முடியாது. தோல்வியில் இருந்து விழுந்துதான் வர முடியும். உங்கள் உடம்பில் உள்ள தழும்புகளை மறந்துவிடாதீர்கள். தோல்வியில்லாமல் வெற்றி அமைந்ததாக சரித்திரம் இல்லை' எனப் பேசினார்.

காற்றில் பறந்ததா திமுகவின் தேர்தல் அறிக்கை?: இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தனர். முழுவதுமாக பொருளாதார நிலைமையை தெரிந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள். பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் என சொல்கிறார்கள். சொன்னதை செய்யவில்லை என்பது தான் பாஜகவின் கேள்வி. வேறு மாநிலத்தில் பாஜக சொல்லவில்லை; ஆனால், செய்தார்கள். உத்தரப்பிரதேசம், புதுச்சேரியில் எவ்வளவு குறைத்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள் ஏன் செய்யவில்லை.

நாடெங்கும் கேஸ் எப்படி வந்ததது: திமுக முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது 67% கேஸ் பயன்படுத்தினர். இன்று 99.3% பேர் கேஸ் பயன்படுத்துகின்றனர். பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நாம் அதை இம்போர்ட் பண்ணுகிறோம். முன்பு இருந்ததை விட இரண்டு மடங்காக இம்போர்ட் பண்ண வேண்டிய நிலைமையுள்ளது. அரசு போராடிக் கொண்டு வந்து கொடுக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டு வருகிறது.

உலக அரசியலில் திமுக: உலகளவில் ஐரோப்பிய யூனியன் கட்டாயப்படுத்துகின்றனர். ரஷ்யாவிடம் வாங்கினால், இப்படித்தான் வாங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். இந்தியா மட்டும்தான் சர்வதேச அளவில் துணிந்து பேசுகிறோம். இந்தியாவிற்கு கேஸ் பெட்ரோல் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிறதோ? அங்கு வாங்குவோம். செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தாதீர்கள் உலகம் முழுவதுமே பிரச்சனை. உக்ரைன் ரஷ்யா என பல. அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்து பார்க்கையில் விலை எவ்வளவு உள்ளது என்று ஒப்பிட்டு பாருங்கள். திமுக பேப்பர் படிக்கவில்லை. குண்டு சட்டியில் அரசியல் செய்கிறது.

எகிறும் மின் கட்டணம்;மத்திய அரசுக்கு என்ன பங்கு?: மின்சாரத்தில் மத்திய அரசு விலை ஏற்றியதாக ஒரு லெட்டர் காட்டுங்கள். இல்லையென்றால் உங்கள் ஊடகத்தில் லீக் செய்யுங்கள். யாரும் யாரையும் ஏற்ற சொல்லவில்லை. விண்டு எனர்ஜி, சோலார் முதல் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. பிஜிஆர் போன்ற பிரைவேட் நிறுவனத்தை ஆதரிக்க விலை ஏற்றம் நடைபெற்றுள்ளது. சாமானிய மக்களுக்கு விலை ஏற்றம் பெரிய பாதிப்பு.

மாநிலமெங்கும் மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பாகாது எனவும், பிஜிஆர் போன்ற தனியார் நிறுவனத்திற்காகவே இம்மாதிரியான விலையேற்றம் எனவும், மாநில அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய தயாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசே! வெள்ளை அறிக்கை அளிக்க தயாரா?: வெள்ளை அறிக்கை ரிலீஸ் செய்யுங்கள் எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள் நஷ்டத்திற்கு காரணம் என்ன என்ற 20 பக்கத்தை விட்டால் மக்கள் கூட்டி கழித்தால் தெரிந்துவிடும். எதுவும் செய்யாமல் தனியார் நிறுவனத்திற்கு பயன்படும் என்பதற்காக ஹோல் மூலமாகத்தான் செய்வோம் என்பது அபத்தம்.

மின்சாரத்துறையில் லஞ்சம்: ஒரு மெகா வாட்டுக்கு திருப்பூரில் ரூ.20 லட்சம் கமிஷன் கேட்கின்றனர். பெயர் மாற்றத்திற்கு ரூ.10 லட்சம் வாங்குகின்றனர். இப்படி இருந்தால் எப்படி புது ஆள் சோலார் போடுவார்கள். எப்படி காஸ்ட் ஆப் ப்ரொடக்ஷன் குறைக்க முடியும். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தையும் பிஜேபி மாநிலத்தையும் கம்பேர் செய்யாதீர்கள். ரூஃப் டாப் சோலாரானது, தமிழ்நாட்டில் 3500 மெகாவாட் உள்ளது. ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்கிறீர்கள்.

பொய் சொல்ல கோவை வந்து சென்றாரா?: தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்மாக, 3500 மெகாவாட் போடுவோம் என சொல்லியுள்ளது. ஆனால், 300 மெகாவாட் கூட இல்லை. ஒயிட் பேப்பர் கொடுங்கள். ஐஏஎஸ் அலுவலர்களை கேட்டால் உண்மையை சொல்வார்கள். பொய் சொல்லவே, சில பேர் கோவை கிளம்பி வருகின்றனர். பொய் சொல்லவே அமைச்சர்கள் வருகின்றனர்.

மக்களுக்கு பயனற்ற நடைபயணம்: ராகுல்காந்தி நடைப்பயணம் மக்களுக்கு பொழுதுபோக்கு. காங்கிரஸ்காரர்கள் சண்டை போட்டால் வலது இடது என இடத்தில் நிறுத்தி கொள்கிறார். நடை பயணத்தின் முடிவை நாம் பார்க்கிறோம் தேர்தலில். இந்தியாவைப் பிரிக்கக் கூடியவர்களை வைத்து சுற்றித் திரிகிறார். ஆனால், அவருக்கு அது ஃபிட்டாக அமைந்துள்ளது. எக்சசைஸ் ஆக அமைந்ததோடு, உடன் சென்ற காங்கிரஸ்காரர்களும் ஃபிட் ஆகினர். மக்களுக்கு பயனில்லை.

மத்திய அரசால் நாடெங்கும் 83 கோடி பேருக்கு உணவு: மத்திய அரசு, வரும் 2023 வரைக்கும் ஏழைகளுக்கான உணவு ரூ.2 லட்சம் கோடி வரை செலவு அதிகப்படுத்தி உள்ளனர். 83 கோடி மக்கள் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில் பயன் அடைகின்றனர்.

'பொங்கல் தொகுப்பு அல்ல'-'பொய் தொகுப்பே': இதையாவது, தமிழ்நாடு அரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் வேண்டுகோள். போன வருஷம் கரும்பு கொடுத்தீங்க. இந்த வருடம் கரும்பு கொடுக்கவில்லை. பனை வெல்லத்தை ஆரம்பிக்கிறோம் என்றனர். ஆனால், பொங்கலுக்கு கொடுத்திருக்கலாமே. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றனர். இன்னைக்கு நீங்கள் என்ன ஆயிரத்தி சில்லறை கொடுக்கிறீர்கள். ஆகவே, இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு.

அபத்தமான அமைச்சரின் பேச்சு: அமைச்சர் ஏ.வ.வேலு ஏன் சக்கரை பொங்கல் கொடுக்கிறோம் என்றால் அப்போதுதான் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் என அபத்தமாக தெரிவிக்கிறார். இது அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை மக்களின் கோபத்திற்கு ஆளாகுகிறார்கள்.

இந்த ஆட்சியில் ஏன் ரூ.1000 கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் அரிசியும் சக்கரையும் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. போனவருடம் ஏன் வெள்ளம் கொடுத்தீர்கள் தெரியாது. ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஐயாயிரம் என்றீர்கள் சும்மா சொன்னோம். மக்கள் 2024 இல் முடிவுரை எழுதுவார்கள் திமுகவிற்கு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகி விட்டார் பார்ப்போம். அங்கு உத்தவ் தாகரே அமைச்சராகியதும் என்ன ஆனது என்று பாருங்கள்' என்றார்.

இதையும் படிங்க: பாஜக Vs திமுக.. தூத்துக்குடியில் நடக்கும் மல்லுக்கட்டு...

எகிறும் மின் கட்டணம்; வெள்ளை அறிக்கை தர அரசு தயாரா? - அண்ணாமலை

கோவை: இன்ஸ்டிடியூட் ஆஃப் சாட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் மெகா பட்டய கணக்காளர்களின் மாணவர் மாநாடு (Mega Chartered Accountants Student Conference) கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் இன்று (டிச.24) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை குறித்து பேசினார். அப்போது அவர், 'இந்த மாணவர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி. நாடே உங்கள் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். 9 பிஸ்னர்ஸ் கிளஸ்டர்ஸ்க்கு (Business Clusters) கோவை தாய் வீடாக உள்ளது.

பெரும்பான்மையானவர்கள் தோல்வியில் இருந்து வந்துள்ளனர். ஹீமேன் போல பறந்தோ, இயேசுநாதர் போல தண்ணீரில் நடந்திடவோ முடியாது. தோல்வியில் இருந்து விழுந்துதான் வர முடியும். உங்கள் உடம்பில் உள்ள தழும்புகளை மறந்துவிடாதீர்கள். தோல்வியில்லாமல் வெற்றி அமைந்ததாக சரித்திரம் இல்லை' எனப் பேசினார்.

காற்றில் பறந்ததா திமுகவின் தேர்தல் அறிக்கை?: இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தனர். முழுவதுமாக பொருளாதார நிலைமையை தெரிந்துதான் ஆட்சிக்கு வந்தார்கள். பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் பட்டப் படிப்பு படித்தவர்கள் என சொல்கிறார்கள். சொன்னதை செய்யவில்லை என்பது தான் பாஜகவின் கேள்வி. வேறு மாநிலத்தில் பாஜக சொல்லவில்லை; ஆனால், செய்தார்கள். உத்தரப்பிரதேசம், புதுச்சேரியில் எவ்வளவு குறைத்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொன்னீர்கள் ஏன் செய்யவில்லை.

நாடெங்கும் கேஸ் எப்படி வந்ததது: திமுக முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும் 2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்பொழுது 67% கேஸ் பயன்படுத்தினர். இன்று 99.3% பேர் கேஸ் பயன்படுத்துகின்றனர். பயன்பாடு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நாம் அதை இம்போர்ட் பண்ணுகிறோம். முன்பு இருந்ததை விட இரண்டு மடங்காக இம்போர்ட் பண்ண வேண்டிய நிலைமையுள்ளது. அரசு போராடிக் கொண்டு வந்து கொடுக்கிறது. குறைந்த விலைக்கு கொண்டு வருகிறது.

உலக அரசியலில் திமுக: உலகளவில் ஐரோப்பிய யூனியன் கட்டாயப்படுத்துகின்றனர். ரஷ்யாவிடம் வாங்கினால், இப்படித்தான் வாங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். இந்தியா மட்டும்தான் சர்வதேச அளவில் துணிந்து பேசுகிறோம். இந்தியாவிற்கு கேஸ் பெட்ரோல் எங்கு குறைந்த விலைக்கு கிடைக்கிறதோ? அங்கு வாங்குவோம். செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தாதீர்கள் உலகம் முழுவதுமே பிரச்சனை. உக்ரைன் ரஷ்யா என பல. அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்து பார்க்கையில் விலை எவ்வளவு உள்ளது என்று ஒப்பிட்டு பாருங்கள். திமுக பேப்பர் படிக்கவில்லை. குண்டு சட்டியில் அரசியல் செய்கிறது.

எகிறும் மின் கட்டணம்;மத்திய அரசுக்கு என்ன பங்கு?: மின்சாரத்தில் மத்திய அரசு விலை ஏற்றியதாக ஒரு லெட்டர் காட்டுங்கள். இல்லையென்றால் உங்கள் ஊடகத்தில் லீக் செய்யுங்கள். யாரும் யாரையும் ஏற்ற சொல்லவில்லை. விண்டு எனர்ஜி, சோலார் முதல் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. பிஜிஆர் போன்ற பிரைவேட் நிறுவனத்தை ஆதரிக்க விலை ஏற்றம் நடைபெற்றுள்ளது. சாமானிய மக்களுக்கு விலை ஏற்றம் பெரிய பாதிப்பு.

மாநிலமெங்கும் மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு பொறுப்பாகாது எனவும், பிஜிஆர் போன்ற தனியார் நிறுவனத்திற்காகவே இம்மாதிரியான விலையேற்றம் எனவும், மாநில அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய தயாரா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசே! வெள்ளை அறிக்கை அளிக்க தயாரா?: வெள்ளை அறிக்கை ரிலீஸ் செய்யுங்கள் எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள் நஷ்டத்திற்கு காரணம் என்ன என்ற 20 பக்கத்தை விட்டால் மக்கள் கூட்டி கழித்தால் தெரிந்துவிடும். எதுவும் செய்யாமல் தனியார் நிறுவனத்திற்கு பயன்படும் என்பதற்காக ஹோல் மூலமாகத்தான் செய்வோம் என்பது அபத்தம்.

மின்சாரத்துறையில் லஞ்சம்: ஒரு மெகா வாட்டுக்கு திருப்பூரில் ரூ.20 லட்சம் கமிஷன் கேட்கின்றனர். பெயர் மாற்றத்திற்கு ரூ.10 லட்சம் வாங்குகின்றனர். இப்படி இருந்தால் எப்படி புது ஆள் சோலார் போடுவார்கள். எப்படி காஸ்ட் ஆப் ப்ரொடக்ஷன் குறைக்க முடியும். காங்கிரஸ் ஆளும் மாநிலத்தையும் பிஜேபி மாநிலத்தையும் கம்பேர் செய்யாதீர்கள். ரூஃப் டாப் சோலாரானது, தமிழ்நாட்டில் 3500 மெகாவாட் உள்ளது. ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்கிறீர்கள்.

பொய் சொல்ல கோவை வந்து சென்றாரா?: தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்மாக, 3500 மெகாவாட் போடுவோம் என சொல்லியுள்ளது. ஆனால், 300 மெகாவாட் கூட இல்லை. ஒயிட் பேப்பர் கொடுங்கள். ஐஏஎஸ் அலுவலர்களை கேட்டால் உண்மையை சொல்வார்கள். பொய் சொல்லவே, சில பேர் கோவை கிளம்பி வருகின்றனர். பொய் சொல்லவே அமைச்சர்கள் வருகின்றனர்.

மக்களுக்கு பயனற்ற நடைபயணம்: ராகுல்காந்தி நடைப்பயணம் மக்களுக்கு பொழுதுபோக்கு. காங்கிரஸ்காரர்கள் சண்டை போட்டால் வலது இடது என இடத்தில் நிறுத்தி கொள்கிறார். நடை பயணத்தின் முடிவை நாம் பார்க்கிறோம் தேர்தலில். இந்தியாவைப் பிரிக்கக் கூடியவர்களை வைத்து சுற்றித் திரிகிறார். ஆனால், அவருக்கு அது ஃபிட்டாக அமைந்துள்ளது. எக்சசைஸ் ஆக அமைந்ததோடு, உடன் சென்ற காங்கிரஸ்காரர்களும் ஃபிட் ஆகினர். மக்களுக்கு பயனில்லை.

மத்திய அரசால் நாடெங்கும் 83 கோடி பேருக்கு உணவு: மத்திய அரசு, வரும் 2023 வரைக்கும் ஏழைகளுக்கான உணவு ரூ.2 லட்சம் கோடி வரை செலவு அதிகப்படுத்தி உள்ளனர். 83 கோடி மக்கள் ஏழைகளுக்கான உணவுத் திட்டத்தில் பயன் அடைகின்றனர்.

'பொங்கல் தொகுப்பு அல்ல'-'பொய் தொகுப்பே': இதையாவது, தமிழ்நாடு அரசு உருப்படியாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் வேண்டுகோள். போன வருஷம் கரும்பு கொடுத்தீங்க. இந்த வருடம் கரும்பு கொடுக்கவில்லை. பனை வெல்லத்தை ஆரம்பிக்கிறோம் என்றனர். ஆனால், பொங்கலுக்கு கொடுத்திருக்கலாமே. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்றனர். இன்னைக்கு நீங்கள் என்ன ஆயிரத்தி சில்லறை கொடுக்கிறீர்கள். ஆகவே, இது பொங்கல் தொகுப்பு அல்ல பொய் தொகுப்பு.

அபத்தமான அமைச்சரின் பேச்சு: அமைச்சர் ஏ.வ.வேலு ஏன் சக்கரை பொங்கல் கொடுக்கிறோம் என்றால் அப்போதுதான் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாப்பிடுவார்கள் என அபத்தமாக தெரிவிக்கிறார். இது அரசுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை மக்களின் கோபத்திற்கு ஆளாகுகிறார்கள்.

இந்த ஆட்சியில் ஏன் ரூ.1000 கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஏன் அரிசியும் சக்கரையும் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. போனவருடம் ஏன் வெள்ளம் கொடுத்தீர்கள் தெரியாது. ஏன் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஐயாயிரம் என்றீர்கள் சும்மா சொன்னோம். மக்கள் 2024 இல் முடிவுரை எழுதுவார்கள் திமுகவிற்கு. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகி விட்டார் பார்ப்போம். அங்கு உத்தவ் தாகரே அமைச்சராகியதும் என்ன ஆனது என்று பாருங்கள்' என்றார்.

இதையும் படிங்க: பாஜக Vs திமுக.. தூத்துக்குடியில் நடக்கும் மல்லுக்கட்டு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.