ETV Bharat / state

அதிமுக 52ஆம் ஆண்டு துவக்க விழா; "உங்களுக்கு என்ன பிரச்சனை?" - கூட்டணி குறித்து எஸ்.பி.வேலுமணி கருத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 2:22 PM IST

S.P.Velumani Press meet at kovai: அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோவை அண்ணா சிலையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

S.P.Velumani Press meet at kovai
அதிமுக 52ம் ஆண்டு துவக்க விழா
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோயம்புத்தூர்: அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோவையில் அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "இந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில், கோவைக்கு எந்த திட்டமும் தராமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடியார் எப்போது மீண்டும் முதலமைச்சராவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியார் சொன்னதை நாம் செய்தாலே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்" என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, "அதிமுக இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 52வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக வருங்கால முதல்வர் எடப்பாடியாரால் கொடியேற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவையில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் சிறப்பான முறையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோவைக்கு திமுக எந்த திட்டமும் வழங்கவில்லை. தரமற்ற வேலைகளாக கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் முழுமையாக முடிப்பதில்லை” என்றார். தொடர்ந்து நேற்று பெய்த மழையில் வட்டவழங்கல் அலுவலர் உயிரிழந்தது குறித்து பேசிய அவர், ‘இச்சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மாதம் ஒரு முறை பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் கோவையில் அஜாக்கிரதையாக பணிகள் நடைபெறுகிறது’ என்றார்.

அதிமுகவின் ஏக்நாக் சிண்டே என சமூக வலைத்தளங்களில் கூறுவது குறித்தான கேள்விக்கு, ‘அவர் கட்சிக்கு துரோகம் செய்தவர். இந்த பிரச்னையை யார் கிளப்புகிறார்கள் என்பது உங்களுக்குத் (செய்தியாளர்கள்) தெரியும். ஏதாவது செய்து குளிர்காய வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். அதிலும் முக்கியமாக திமுகதான், திமுக ஐடி விங் தெளிவாக உள்ளது’ எனவும் கூறினார்.

ஆடுகள் வெட்டப்பட்டது என பரவிய செய்திக்கு பதிலளித்த அவர், ‘எங்கள் வீட்டு விசேஷங்களில் திருமண பத்திரிக்கை தர ஆரம்பித்தாலே நாமெல்லாம் நான்வெஜ் சாப்பிட மாட்டோம். நம்முடைய பகுதியில் திருமணம் என்று ஆரம்பித்தாலே வெஜிடேரியன்தான் செய்வோம்” என பதிலளித்தார்.

மேலும் “நான் இந்த கட்சி ஆரம்பத்ததில் இருந்து என் தந்தை காலத்தில் இருந்து வந்தவன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை அடுத்து எடப்பாடியார் எங்களுக்கு தலைவர். குழப்பம் செய்ய வேண்டும் என திமுக உள்பட யார் நினைத்தாலும், எதுவும் நடக்கப் போவதில்லை. எடப்பாடி தலைமையில் வீறு நடை போட்டு கொண்டிருப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் 40-ம் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

மேலும், “கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடியார் வழங்கியுள்ளார். என் மேல் திமுகவிற்கும் முதலமைச்சருக்கும் என்ன கோபம்? திமுக உள்பட சிலர் தங்களை பாஜகவுடன் இணைவார்கள் என கூறி வருகிறார்கள். ஆனால் எடப்பாடியார் தெளிவாக நிலைப்பாட்டை அறிவித்து விட்டார். இருப்பினும் சிலர் அவ்வாறு கூறுகிறார்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சனை? கூட்டணியில் இருந்து வந்து விட்டோம், கூட்டணி கிடையாது என தெளிவாக நாங்கள் கூறி விட்டோம். தற்போது வரை எங்கள் எம்பிக்கள் காவிரி நீர் பிரச்னைக்காக போராடினார்கள், நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள். மேலும் இவர்களைப் (திமுக) போல் நீட் விவகாரத்தில் எடப்பாடியார் நடித்து கொண்டிருக்க மாட்டார்” என தெரிவித்தார்.

எடப்பாடியார் துரோகங்கள், எதிரிகளை முறியடித்து வந்துள்ளார். எனவே எடப்பாடியார் முதலமைச்சராக வருவார், அம்மா (ஜெயலலிதா) ஆட்சியை நாங்கள் தருவோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. திமுக தராத திட்டங்களையும் எடப்பாடியார் தருவார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவின் 52வது தொடக்க விழா; ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்!

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோயம்புத்தூர்: அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கோவையில் அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்தில் கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "இந்த இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில், கோவைக்கு எந்த திட்டமும் தராமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் எடப்பாடியார் எப்போது மீண்டும் முதலமைச்சராவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடியார் சொன்னதை நாம் செய்தாலே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும்" என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, "அதிமுக இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 52வது ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக வருங்கால முதல்வர் எடப்பாடியாரால் கொடியேற்றப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவையில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் சிறப்பான முறையில் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோவைக்கு திமுக எந்த திட்டமும் வழங்கவில்லை. தரமற்ற வேலைகளாக கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் முழுமையாக முடிப்பதில்லை” என்றார். தொடர்ந்து நேற்று பெய்த மழையில் வட்டவழங்கல் அலுவலர் உயிரிழந்தது குறித்து பேசிய அவர், ‘இச்சம்பவம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மாதம் ஒரு முறை பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் கோவையில் அஜாக்கிரதையாக பணிகள் நடைபெறுகிறது’ என்றார்.

அதிமுகவின் ஏக்நாக் சிண்டே என சமூக வலைத்தளங்களில் கூறுவது குறித்தான கேள்விக்கு, ‘அவர் கட்சிக்கு துரோகம் செய்தவர். இந்த பிரச்னையை யார் கிளப்புகிறார்கள் என்பது உங்களுக்குத் (செய்தியாளர்கள்) தெரியும். ஏதாவது செய்து குளிர்காய வேண்டுமென சிலர் நினைக்கிறார்கள். அதிலும் முக்கியமாக திமுகதான், திமுக ஐடி விங் தெளிவாக உள்ளது’ எனவும் கூறினார்.

ஆடுகள் வெட்டப்பட்டது என பரவிய செய்திக்கு பதிலளித்த அவர், ‘எங்கள் வீட்டு விசேஷங்களில் திருமண பத்திரிக்கை தர ஆரம்பித்தாலே நாமெல்லாம் நான்வெஜ் சாப்பிட மாட்டோம். நம்முடைய பகுதியில் திருமணம் என்று ஆரம்பித்தாலே வெஜிடேரியன்தான் செய்வோம்” என பதிலளித்தார்.

மேலும் “நான் இந்த கட்சி ஆரம்பத்ததில் இருந்து என் தந்தை காலத்தில் இருந்து வந்தவன். எம்ஜிஆர், ஜெயலலிதாவை அடுத்து எடப்பாடியார் எங்களுக்கு தலைவர். குழப்பம் செய்ய வேண்டும் என திமுக உள்பட யார் நினைத்தாலும், எதுவும் நடக்கப் போவதில்லை. எடப்பாடி தலைமையில் வீறு நடை போட்டு கொண்டிருப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் 40-ம் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

மேலும், “கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை எடப்பாடியார் வழங்கியுள்ளார். என் மேல் திமுகவிற்கும் முதலமைச்சருக்கும் என்ன கோபம்? திமுக உள்பட சிலர் தங்களை பாஜகவுடன் இணைவார்கள் என கூறி வருகிறார்கள். ஆனால் எடப்பாடியார் தெளிவாக நிலைப்பாட்டை அறிவித்து விட்டார். இருப்பினும் சிலர் அவ்வாறு கூறுகிறார்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சனை? கூட்டணியில் இருந்து வந்து விட்டோம், கூட்டணி கிடையாது என தெளிவாக நாங்கள் கூறி விட்டோம். தற்போது வரை எங்கள் எம்பிக்கள் காவிரி நீர் பிரச்னைக்காக போராடினார்கள், நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள். மேலும் இவர்களைப் (திமுக) போல் நீட் விவகாரத்தில் எடப்பாடியார் நடித்து கொண்டிருக்க மாட்டார்” என தெரிவித்தார்.

எடப்பாடியார் துரோகங்கள், எதிரிகளை முறியடித்து வந்துள்ளார். எனவே எடப்பாடியார் முதலமைச்சராக வருவார், அம்மா (ஜெயலலிதா) ஆட்சியை நாங்கள் தருவோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. திமுக தராத திட்டங்களையும் எடப்பாடியார் தருவார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுகவின் 52வது தொடக்க விழா; ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.