ETV Bharat / state

கோவையில் களைகட்டிய ரேக்ளா பந்தயம் - பொதுமக்கள் கண்டுகளிப்பு - ரேக்லா போட்டி ஆர்வமுடன் ரசித்த மக்கள்

கோயம்புத்தூர்: தனியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய ரேக்ளா பந்தயத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

rakla-race-in-coimbator-fourth-year-celebrated
rakla-race-in-coimbator-fourth-year-celebrated
author img

By

Published : Jan 6, 2020, 11:24 AM IST

கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் ஸ்ரீ சக்தி கல்லூரி மற்றும் செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு வேளாண் திருவிழாவையொட்டி, 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

4 வயதிற்குட்பட்ட காளைகள் 20 மீட்டர் போட்டியிலும், 4 வயதிற்கு மேற்பட்ட காளைகள் 300 மீட்டர் போட்டியிலும் பங்கேற்றன. இந்தப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகழித்தனர்.

ரேக்ளா பந்தயத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

இதுகுறித்து பேசிய கல்லூரி பேராசிரியர் மணிகண்டன், 'விவசாயிகளையும், விவசாயிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளையும் நாம் மறக்கக் கூடாது. மனிதர்களுக்கு விளையாட்டு எவ்வளவு முக்கியமோ அதே போல் காளைகளுக்கும் இது போன்ற போட்டிகள் அவசியம். இயற்கை விவசாயம், வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன' எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு!

கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் ஸ்ரீ சக்தி கல்லூரி மற்றும் செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளை சார்பில் நான்காம் ஆண்டு வேளாண் திருவிழாவையொட்டி, 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

4 வயதிற்குட்பட்ட காளைகள் 20 மீட்டர் போட்டியிலும், 4 வயதிற்கு மேற்பட்ட காளைகள் 300 மீட்டர் போட்டியிலும் பங்கேற்றன. இந்தப் பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகழித்தனர்.

ரேக்ளா பந்தயத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

இதுகுறித்து பேசிய கல்லூரி பேராசிரியர் மணிகண்டன், 'விவசாயிகளையும், விவசாயிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளையும் நாம் மறக்கக் கூடாது. மனிதர்களுக்கு விளையாட்டு எவ்வளவு முக்கியமோ அதே போல் காளைகளுக்கும் இது போன்ற போட்டிகள் அவசியம். இயற்கை விவசாயம், வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போன்ற விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன' எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள்: அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு!

Intro:கோவையில் நடந்த ரேக்லா போட்டி ஆர்வமுடன் ரசித்த மக்கள்.Body:கோவையில் நடந்த ரேக்ளா போட்டி. ஆர்வத்துடன் ரசித்த மக்கள்

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் ஸ்ரீ சக்தி கல்லூரியும் செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளை இணைந்து வேளாண் திருவிழா நடத்தியது. இது நான்காம் ஆண்டு விழாவாகும். இதில் சீரிபாய்ந்த காளைகளை மக்கள் ஆர்வமுடன் கண்டு கழித்தனர். இதில் 200 மீட்டர், 300 மீட்டர் என்று இரு பிரிவுகள் இருந்தது. 200 மீட்டர் பிரிவில் 4 வயதிற்கு குறைவான காளைகளும் 300 மீட்டர் பிரிவில் 4 வயதிற்கு மேற்பட்ட காளைகளும் பங்குபெற்றன. மொத்தமாக 344 காளைகள் கலந்துக்கொண்டன.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் விவசாயிகளையும், விவசாயிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் காளைகளையும் நாம் மறக்க கூடாது என்றும், மனிதர்களுக்கு விளையாட்டு எவ்வளவு முக்கியமோ அதே போல் காளைகளுக்கும் இது போன்ற போட்டிகள் அவசியம் என்று கூறினார். இயற்கை விவசாயம், வேளாண்மையை குறித்த விழிப்புணர்வு ஏறடுத்தவே இது போன்ற விளையாட்டுகள் வைக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.

அதன் பின் பேசிய போட்டியாளர் ஜெயபிரகாஷ் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளன என்றும் இது போன்ற போடிகளின் மூலம் நம் நாட்டு மாடுகளை காக்க முடியும் என்று தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.