ETV Bharat / state

சொந்த ஊரில் தனது வாக்கை செலுத்திய பொள்ளாச்சி ஜெயராமன்

author img

By

Published : Dec 27, 2019, 11:01 AM IST

கோவை: உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில் அதிமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது சொந்த ஊரான திப்பம்பட்டியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை பதிவுசெய்தார்.

local body election  பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குப்பதிவு  உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு  பொள்ளாச்சி ஜெயராமன் திப்பம்பட்டி  pollachi jeyaraman local body eletion  thippampatti election booth
சொந்த ஊரில் தனது வாக்கைச் செலுத்திய பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது சொந்த ஊரான திப்பம்பட்டியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

சொந்த ஊரில் தனது வாக்கைச் செலுத்திய பொள்ளாச்சி ஜெயராமன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் இருக்க தடை ஆணை கேட்டார். ஆனால், நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பித்ததால் திமுகவின் கனவு பலிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றிபெறும்" என்றார்.

இதையும் படிங்க: ‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ஏழு மணிக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது சொந்த ஊரான திப்பம்பட்டியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

சொந்த ஊரில் தனது வாக்கைச் செலுத்திய பொள்ளாச்சி ஜெயராமன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் இருக்க தடை ஆணை கேட்டார். ஆனால், நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆணை பிறப்பித்ததால் திமுகவின் கனவு பலிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மாநகராட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றிபெறும்" என்றார்.

இதையும் படிங்க: ‘மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டார்கள்... திமுக கூட்டணிக்குதான் வெற்றி’

Intro: electionBody:ElectionConclusion:பொள்ளாச்சியில் திப்பம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் வரும் நகராட்சி மாநகராட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் துணை சபாநாயகர் பேட்டி பொள்ளாச்சி 27 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது இதையடுத்து பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் தெற்கு ஒன்றியம் கிணத்துக்கடவு ஆனைமலை 600க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர் மாவட்ட கவுன்சிலர் ஊராட்சி தலைவர் ஒன்றிய கவுன்சிலர் வார்டு உறுப்பினர் என அதிமுக திமுக மற்றும் சுயேட்ச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இதையடுத்து பொள்ளாச்சி சட்டப்பேரவை துணைத்தலைவர் ஜெயராமன் அவர்கள் சொந்த ஊரான திப்பம்பட்டி பொதுமக்களுடன் வரிசையில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார் பின் செய்தியாளர்களிடம் கூறும்போது எதிர்க்கட்சித் தலைவர் தி மு க ஸ்டாலின் பல்வேறு வழக்குகளை உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருக்க தடை ஆணை பெற கோர்ட்டுகளுக்கு சென்றார் நீதிமன்றம் பொதுமக்கள் நலன் கருதி உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்தது திமுகவின் கனவு பலிக்கவில்லை வரும் பிப்ரவரி மாதம் நடக்கும் மாநகராட்சி நகராட்சி தேர்தல் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.