ETV Bharat / state

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம் - அன்புமணி

author img

By

Published : Oct 20, 2022, 5:23 PM IST

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம் என பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ட்
அன்ப்ும்்்

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 'சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை. அதனை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தால் அது சட்டப்பேரவையில் எடுபடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காவல் துறையினர் இதனை பாடமாக வைத்துக்கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

அப்போது, சட்டப்பேரவையில் அதிமுகவின் இருக்கை பிரச்னை தொடர்பான பதில் அளித்த அவர், 'இது கட்சி சார்ந்த பிரச்னை. மேலும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள பின்னலாடைத் தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. தற்போது 40% ஆர்டர்கள் குறைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களின் வாழ்வாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

90% பணிகள் முடிந்ததாக கூறப்படும் அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிவடையவில்லை?. பரம்பிக்குளம் அணையில் 12 டிஎம்சி நீர் வீணாகியுள்ளது. இனி இது போன்று நடக்கக் கூடாது. செங்கல் சூளைகளுக்காக செம்மண் அள்ளுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். மதுக்கடைகளுக்கு இலக்கவைத்து விற்பனை செய்வதனைவிட மாணவர்கள், குழந்தைகளுக்கான கல்வி தடுப்பூசிகளுக்கு இலக்கு வைத்து அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவாக செயல்படுத்தவேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா, நல்லாறு - பாம்பாறு திட்டம் செயல்படுத்த வேண்டும். சட்டப்பேரவை 100 நாட்கள் நடக்க வேண்டும். அதிகமான விவாதம் நடத்தபட வேண்டும்.

போதை - கலாசாரத்தை தடை செய்ய வேண்டும். போதுமான காவலர்கள் இல்லை என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதால் பேருந்து கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம் - அன்புமணி ராமதாஸ்

தனியார் நிறுவன பால் விலையைக் குறைக்க வேண்டும். ஆவின் பால் விலையை விட தனியார் பால் விலையை உயர்த்தியுள்ளனர். ஒரு ஆண்டில் நான்கு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். பாமக கோவை மாவட்டச்செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தற்போது ஒரு அரசுப்பள்ளி அறையை, பாமக மாடல் பள்ளி அறையாக மாற்றியுள்ளார். அதனை தமிழ்நாடு முதலமைச்சரும் பள்ளிகல்வித்துறையும் பின்பற்றி அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளிப் பண்டிகையில் எந்த வித மூட நம்பிக்கைக்கும் இடமில்லை - கிருஷ்ணசாமி

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 'சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ப்ரொபஷனல் ஆக இல்லை. அதனை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தால் அது சட்டப்பேரவையில் எடுபடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

காவல் துறையினர் இதனை பாடமாக வைத்துக்கொண்டு கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார்.

அப்போது, சட்டப்பேரவையில் அதிமுகவின் இருக்கை பிரச்னை தொடர்பான பதில் அளித்த அவர், 'இது கட்சி சார்ந்த பிரச்னை. மேலும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்து அதன் அடிப்படையில் சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள பின்னலாடைத் தொழில் அதிகமாக கொங்கு பகுதியில் உள்ளது. தற்போது 40% ஆர்டர்கள் குறைந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விரைந்து தொழிலை மீட்டெடுக்கவும் தொழிலாளர்களின் வாழ்வாரத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

90% பணிகள் முடிந்ததாக கூறப்படும் அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டம் ஏன் இன்னும் முடிவடையவில்லை?. பரம்பிக்குளம் அணையில் 12 டிஎம்சி நீர் வீணாகியுள்ளது. இனி இது போன்று நடக்கக் கூடாது. செங்கல் சூளைகளுக்காக செம்மண் அள்ளுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை நகருக்கு கூடுதலான மருத்துவக் கல்லூரி வேண்டும். மதுக்கடைகளுக்கு இலக்கவைத்து விற்பனை செய்வதனைவிட மாணவர்கள், குழந்தைகளுக்கான கல்வி தடுப்பூசிகளுக்கு இலக்கு வைத்து அரசு செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவாக செயல்படுத்தவேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா, நல்லாறு - பாம்பாறு திட்டம் செயல்படுத்த வேண்டும். சட்டப்பேரவை 100 நாட்கள் நடக்க வேண்டும். அதிகமான விவாதம் நடத்தபட வேண்டும்.

போதை - கலாசாரத்தை தடை செய்ய வேண்டும். போதுமான காவலர்கள் இல்லை என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதால் பேருந்து கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம் - அன்புமணி ராமதாஸ்

தனியார் நிறுவன பால் விலையைக் குறைக்க வேண்டும். ஆவின் பால் விலையை விட தனியார் பால் விலையை உயர்த்தியுள்ளனர். ஒரு ஆண்டில் நான்கு முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். பாமக கோவை மாவட்டச்செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தற்போது ஒரு அரசுப்பள்ளி அறையை, பாமக மாடல் பள்ளி அறையாக மாற்றியுள்ளார். அதனை தமிழ்நாடு முதலமைச்சரும் பள்ளிகல்வித்துறையும் பின்பற்றி அரசு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளிப் பண்டிகையில் எந்த வித மூட நம்பிக்கைக்கும் இடமில்லை - கிருஷ்ணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.