ETV Bharat / state

இரு தரப்பினரிடையே மோதல்: கிராம மக்கள் தர்ணா!

author img

By

Published : Mar 11, 2019, 11:43 PM IST

பொள்ளாச்சி: இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவருவதால், தாக்குதலை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் மக்கள்

பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துரை கிராமத்தில் இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இரு தரப்பு இளைஞர்களிடை ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றவர் வீடுகளில் கல் எறிந்தும், பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட இருதரப்பு இளைஞர்கள் உட்பட சிலரை கைது செய்து கோட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்

இதையடுத்து, குடிபோதையில் அவ்வப்போது ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் பிடித்து வைத்துள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதி பதட்டமாக காணப்படுகிறது. மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துரை கிராமத்தில் இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

இரு தரப்பு இளைஞர்களிடை ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் மற்றவர் வீடுகளில் கல் எறிந்தும், பாட்டில்களை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட இருதரப்பு இளைஞர்கள் உட்பட சிலரை கைது செய்து கோட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்

இதையடுத்து, குடிபோதையில் அவ்வப்போது ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் பிடித்து வைத்துள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப்பகுதி பதட்டமாக காணப்படுகிறது. மீண்டும் மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சார் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
பொள்ளாச்சி : மார்ச் 11
பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் நேற்று இரவு இரு பிரிவினரிடையே இளைஞர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது அப்போது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர்கள் வீடுகளில் கற்களை  எறிந்தும் பாட்டில்களையும் வீசி தாக கூறப்படுகிறது இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது பின்னர் அங்கு விரைந்த காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட இருதரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் பின்னர் இது தொடர்பாக கோட்டூர் போலீசார் மோதலில் ஈடுபட்ட வகளிடம் விசாரித்து வருகின்றனர் இந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் மீது தொடர்ந்து அங்குள்ளவர்கள் குடிபோதையில் தாக்குவதாகவும்  வீட்டுக்குள் பாட்டில்கள் கற்களை வீசி  தகாத வார்த்தைகளால் திட்டி வருவதால்  பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் கூறி இன்று 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்நிலையத்தில் வைத்துள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் இரு பிரிவினரிடையே மேலும் மோதல் ஏற்படும் என்பதால் சோமநாதரை சித்தூர கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
பேட்டி: பிரியா சோமந்துரை சித்தூர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.