வடக்கு கோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இணையவழி உறுப்பினர் சேர்க்கையில், நாள்தோறும் குறைந்தது ஆயிரக்கணக்கான பேர் இணைய வழியில் திமுகவில் இணைகின்றனர். பெண்கள், இளைஞர்கள் என அதிகமானோர் சேர்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டும் தற்போதுவரை 29 ஆயிரம் பேர் இணைய வழியில் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 20 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். வருகின்ற 13ஆம் தேதி கோவை வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, திமுக அலுவலகத்தில் நடைபெறும் இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். எனவே, இளைஞரணி நிர்வாகிகள் பொறுப்பிற்கு வர விரும்புவோர் பதிவு செய்யலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?