கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மதிமுக சார்பில் கபசுரக் குடிநீர், முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், கோவை புறநகர் மதிமுக மாவட்டச் செயலாளர் குகன் மில்செந்தில், மறுமலர்ச்சி முரளி ஆகியோர் தலைமை தாங்கினர்.
நகரச் செயலாளர் துரை பாய், இளைஞர் அணி துணைச் செயலாளர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ரவிச்சந்திரன், பீடா ரவி, சுரேஷ், என்.கே. பால மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, மாவட்டச் செயலாளர் குகன் மில்செந்தில் கூறுகையில், ”இன்று தொடங்கிய நிகழ்ச்சியில் 300 பேருக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டன. நாள்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரை காந்தி சிலை அருகில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.