ETV Bharat / state

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் தாமதம் இல்லை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் அரசு தாமதம் செய்யாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் தாமதம் இல்லை
ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் தாமதம் இல்லை
author img

By

Published : Oct 18, 2021, 5:32 PM IST

கோயம்புத்தூர்: மத்திய சிறைச்சாலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (அக்.18) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மத்திய சிறைச்சாலையில் சிறை கைதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். கோவையில் உள்ள இந்த சிறையில் கைதிகளுக்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

செம்மொழி பூங்கா

தற்போது உள்ள மத்திய சிறைச்சாலைகள் நவீன மயமாக்கப்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம். திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு. கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டால் கலைஞர் கருணாநிதி அறிவித்தது போல் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்" என்றார்.

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் தாமதம் இல்லை

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் தாமதம் இல்லை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முழு முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மீது பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டும் கைது செய்யாதது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் அரசு தாமதம் செய்யாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார் சுதாகரன்!

கோயம்புத்தூர்: மத்திய சிறைச்சாலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (அக்.18) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மத்திய சிறைச்சாலையில் சிறை கைதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். கோவையில் உள்ள இந்த சிறையில் கைதிகளுக்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

செம்மொழி பூங்கா

தற்போது உள்ள மத்திய சிறைச்சாலைகள் நவீன மயமாக்கப்பட வேண்டும் என்பது முதலமைச்சரின் எண்ணம். திறந்த வெளி சிறைச்சாலைகள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு. கோவையில் உள்ள மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டால் கலைஞர் கருணாநிதி அறிவித்தது போல் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்" என்றார்.

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் தாமதம் இல்லை

ஹெச்.ராஜா கைது நடவடிக்கையில் தாமதம் இல்லை

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முழு முயற்சி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மீது பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டும் கைது செய்யாதது குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் அரசு தாமதம் செய்யாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார் சுதாகரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.