ETV Bharat / state

பொள்ளாச்சி விவகாரம் : சட்ட உள்ளிருப்பு போராட்டம்

author img

By

Published : Mar 19, 2019, 10:34 PM IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து தற்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 167 பேர் மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்ய கோரியும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கல்லூரி முதல்வரை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து தற்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 167 பேர் மீதான வழக்கை உடனடியாக ரத்து செய்ய கோரியும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கல்லூரி முதல்வரை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சு.சீனிவாசன்.      கோவை



பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், வழக்கறிஞர்கள் அனைத்து கட்சி அமைப்பினர் என பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வழக்குப்பதிவு ஆனவர்கள் யாரும் தேர்வு எழுத முடியாது என சட்டக் கல்லூரி முதல்வர் அறிக்கை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்ததை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து தற்போது சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.167 பேர் மீதான வழக்கை உடனடியாக ரத்து  செய்ய கோரியும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் கல்லூரி முதல்வரை கண்டித்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.