ETV Bharat / state

ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டி பூஜை; உருகும் தொண்டர்கள்!

கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோயிலில் சிலை அமைத்து அதிமுக தொண்டர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருவது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

author img

By

Published : Jul 18, 2019, 10:56 PM IST

ஜெயலலிதா

கோவை மாவட்டம், மூரண்டம்மன் கோயில் வீதியில் ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அமைக்கப்பட்டது, அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. காலபைரவர், ஆஞ்சநேயர் ஆகிய சிலைகளோடு ஜெயலலிதா சிலையும் உள்ளது. அச்சிலையில் ஜெயலலிதா உருவம், வேல், மணி, இரட்டை இலை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இது குறித்து வேணுகோபால் கூறுகையில், "அதிமுக ஆட்சிக் காலத்தில் கணேசபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு நன்றிக் கடனை செலுத்தும் வகையில் கோயிலில் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். 8 டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதா சிலை, ஆஞ்சநேயர் சிலை, 12 ராசிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் செலவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஜெயலலிதா கோயில்

கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும் போது, ஜெயலலிதா சிலைக்கும் சேர்த்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இக்கோயிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அதிமுகவினர் ஜெயலலிதாவை கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மூரண்டம்மன் கோயில் வீதியில் ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை அமைக்கப்பட்டது, அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. காலபைரவர், ஆஞ்சநேயர் ஆகிய சிலைகளோடு ஜெயலலிதா சிலையும் உள்ளது. அச்சிலையில் ஜெயலலிதா உருவம், வேல், மணி, இரட்டை இலை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இது குறித்து வேணுகோபால் கூறுகையில், "அதிமுக ஆட்சிக் காலத்தில் கணேசபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கு நன்றிக் கடனை செலுத்தும் வகையில் கோயிலில் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். 8 டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதா சிலை, ஆஞ்சநேயர் சிலை, 12 ராசிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் செலவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஜெயலலிதா கோயில்

கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும் போது, ஜெயலலிதா சிலைக்கும் சேர்த்து பூஜைகள் நடத்தப்படுகிறது. இக்கோயிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அதிமுகவினர் ஜெயலலிதாவை கடவுளாக நினைத்து வழிபாடு செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவிலில் சிலை அமைத்து அதிமுக தொண்டர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். 8 டன் கொண்ட ஒரே கல்லில் கடவுள் சிலைகளோடு, ஜெயலலிதா சிலையும் செதுக்கப்பட்டுள்ளது..Body:


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டான கணேசபுரம் பகுதியில் மூரண்டம்மன் கோவில் வீதி உள்ளது. அப்பகுதியில் மாநகராட்சி யோகா மையம் உள்ளது. இதற்கு முன்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலரான வேணுகோபால் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் ஒரு கோவிலை அமைத்துள்ளனர். அருள்மிகு ஈசப்பன், காலபைரவர் ஆஞ்சநேயர் திருக்கோவில் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள கோவிலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. காலபைரவர், ஆஞ்சநேயர், ஆகிய சிலைகளோடு ஜெயலலிதா சிலையும் உள்ளது. அச்சிலையில் ஜெயலலிதா உருவம், வேல், மணி, இரட்டை இலை ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் ஜெயலலிதா வாழ்ந்த வருடம் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, ஜெயலலிதா அவர்களால் உருவாக்கப்பட்டது என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கணேசபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு நன்றிக்கடனா செலுத்தும் வகையில் கோவிலில் சிலை அமைத்து வழிபாடு செய்வதாகவும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் வேணுகோபால் தெரிவித்தார். மேலும் 8 டன் கொண்ட ஒரே கல்லில் ஜெயலலிதா சிலை, ஆஞ்சநேயர் சிலை, 12 ராசிகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளதாகவும், 5 இலட்ச ரூபாய் செலவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறும் போது, ஜெயலலிதா சிலைக்கும் சேர்த்து பூஜைகள் நடத்தப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இக்கோவிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஜெயலலிதா அதிமுகவினருக்கு கடவுள் எனவும், ஜெயலலிதா அம்மாவை தெய்வமாக வணங்கி வருவதாகவும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவிலில் சிலை அமைத்து வழிபாடு செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதுConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.