ETV Bharat / state

வால்பாறையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - rain caused the livelihood

கோவை: தொடர் கனமழையால் வால்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

rain
author img

By

Published : Aug 10, 2019, 4:27 AM IST

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதேபோல் வால்பாறை பகுதிகளிலும் நீடித்துவரும் மழைக்காரணமாக அங்குள்ள கூளாங்கல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் அரசு பேருந்து நிலையம், பணிமனை ஆகிய இடங்களில் புகுந்ததால், வால்பாறை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் வெள்ளம் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்காடு, டோபி காலணி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, கம்பளி உள்ளிட்ட பொருட்களும் தரப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள வால்பாறை

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் அரசு மருத்துவர்கள், வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, வனத்துறையினர், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதேபோல் வால்பாறை பகுதிகளிலும் நீடித்துவரும் மழைக்காரணமாக அங்குள்ள கூளாங்கல் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் அரசு பேருந்து நிலையம், பணிமனை ஆகிய இடங்களில் புகுந்ததால், வால்பாறை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து இயக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் வெள்ளம் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்காடு, டோபி காலணி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, கம்பளி உள்ளிட்ட பொருட்களும் தரப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள வால்பாறை

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில் அரசு மருத்துவர்கள், வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை, வனத்துறையினர், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் தெரிவித்தார்.

Intro:rainBody:rainConclusion:வால்பாறையில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வெள்ளக்காடாக மாறிய வால்பாறை, வால்பாறை- 9 வால்பாறை ஒரு வார காலமாக தொடர் கனமழையால் கூளாங்கல் ஆற்றின் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டு அரசு பேருந்து நிலையம், பணிமனை பகுதிகளில் வெள்ளம் புகுந்தது, இதனால் வால்பாறை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்து இயக்க முடியதா சூழ்நிலை, மேலும் ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்கள், சோலையார் அணையின் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய் கோட்டாச்சியர் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர், மேலும் புதுக்காடு, டோபி காலணி, வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மக்கள் அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் கூறும்போது தொடர் கனமழையால் வால்பாறையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு உணவு, கம்பளி, என அவர்களுக்கு தேவையானவை தரப்பட்டுள்ளது, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டும், மாவட்ட ஆட்சியரின் உத்திரவின் பேரில்அரசுமருத்துவர்கள் வருவாய்த்துறை, தீயணைப்பு துறைகாவல்துறை,வனத்துறையினர் , நெடுஞ்சாலை துறையினர் என குழுக்களாக அமைத்து தயார் நிலையிலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற வருகின்றனர், மேலும் பொள்ளாச்சியில் இருந்து வரும் கனரக வாகனம் வால்பாறைக்கு அனுமதி இல்லை, மழை முடியும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, சாலையில் விழும் மரங்கள் , மண்சரிவுகள் விரைவாக அகற்றப்பட்டு சீர் செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.