ETV Bharat / state

அனுமதி பெறாமல் டிரக்கிங் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழப்பு!

author img

By

Published : Jan 19, 2020, 7:54 PM IST

கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் அனுமதி பெறாமல் டிரக்கிங் சென்ற பெண் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

elephant-kills-woman
elephant-kills-woman

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பாலமலையிலிருந்து குஞ்சூர்பதி நோக்கி வனத் துறையினரின் அனுமதி பெறாமல் எட்டு பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த ஆண் யானை அவர்களைத் துரத்தியுள்ளது.

அதில் பெண்மணி ஒருவர் யானையிடம் சிக்கி, அதனால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர், காவல் துறையினர் மீட்டு உடற்கூறாய்விற்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் புவனேஸ்வரி என்பதும், அவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அனுமதிபெறாமல் டிரக்கிங் செல்பவர்களைக் கண்டுகொள்ளாமல் வனத் துறையினர் அலட்சியம்காட்டுவதாலே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறதென அப்பகுதி மக்கள் குறைகூறுகின்றனர்.

இதையும் படிங்க: காரை துரத்திய காட்டு யானை - அலறிய பயணிகள்!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட பாலமலையிலிருந்து குஞ்சூர்பதி நோக்கி வனத் துறையினரின் அனுமதி பெறாமல் எட்டு பேர் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியே வந்த ஆண் யானை அவர்களைத் துரத்தியுள்ளது.

அதில் பெண்மணி ஒருவர் யானையிடம் சிக்கி, அதனால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர், காவல் துறையினர் மீட்டு உடற்கூறாய்விற்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் புவனேஸ்வரி என்பதும், அவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அனுமதிபெறாமல் டிரக்கிங் செல்பவர்களைக் கண்டுகொள்ளாமல் வனத் துறையினர் அலட்சியம்காட்டுவதாலே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறதென அப்பகுதி மக்கள் குறைகூறுகின்றனர்.

இதையும் படிங்க: காரை துரத்திய காட்டு யானை - அலறிய பயணிகள்!

Intro:டிரக்கிங் சென்ற போது யானை தாக்கி பெண்மணி பலி.Body:கோவை பெரியநாயக்கன் பாளையம் வனசரகிற்குட்பட்ட பால மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்றபோது யானை தாக்கி பெண் ஒருவர் பலி.

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பாலமலை வழியாக குஞ்சூர்பதியில் வனத் துறையினரின் அனுமதி பெறாமல் டிரக்கிங் சென்ற 8 பேரை அவ்வழியே வந்த ஆண் யானை துரத்தி உள்ளது அப்போது அதனிடமிருந்து தப்பிக்க 8 பேரும் கூடிய நிலையில் புவனேஸ்வரி என்ற பெண் ஓட முடியாமல் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த புவனேஸ்வரி பெரிய நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் என்றும் தெரியவந்தது. அவரது கணவர் மற்றும் நண்பர்கள் அனைவரும் வனப்பகுதிக்குள் அவ்வப்போது டிரக்கிங் மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்றும் அதேபோல் இன்று பாலமலை பகுதிக்கு டிரக்கிங் சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரியவந்தது. அதன்பின் அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

வனத்துறையினரின் அலட்சியத்தினாலேயே இது போன்ற அனுமதியற்ற டிரக்கிங் செல்பவர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.