ETV Bharat / state

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை... சாலையில் தேங்கிய வெள்ள நீரால் வாகன ஓட்டிகள் அவதி!

Heavy rain in Coimbatore: கோவையில் பெய்த கனமழை காரணமாக உப்பிலிபாளையம் மேம்பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 12:23 PM IST

due to heavy rains in coimbatore waters flooded the roads
கோவையில் கொட்டி தீர்த்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி
கோவையில் கொட்டி தீர்த்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி

கோயம்புத்தூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று (நவ.08) இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதனால் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடியது. குறிப்பாக நகரின் முக்கிய சந்திப்புகளான உப்பிலிபாளையம் மேம்பாலம், லாங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாலத்தின் கீழ்ப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையின் புறநகர் பகுதிகளான வீரபாண்டி பிரிவு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாகக் கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடியது.

வழக்கத்தை விட நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு மழை நீர் ஓடுகிறது. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக, பொது பேருந்து போக்குவரத்து இல்லை என்றாலும் கணுவாயில் இருந்து பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதால் பொதுமக்கள் பாலத்தைக் கடக்க முடியாமல் வேறு பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கோபனேரி பகுதியில் வெள்ளியங்கிரி என்பவரின் வீடு மழையின் காரணமாக ஒரு புறம் இடிந்தது.

இந்நிலையில், கனமழையின் காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாகக் கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடரும் கனமழை.. 5 மாவட்டங்களில் இன்று(நவ.9) பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவையில் கொட்டி தீர்த்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி

கோயம்புத்தூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று (நவ.08) இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதனால் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடியது. குறிப்பாக நகரின் முக்கிய சந்திப்புகளான உப்பிலிபாளையம் மேம்பாலம், லாங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாலத்தின் கீழ்ப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அப்பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவையின் புறநகர் பகுதிகளான வீரபாண்டி பிரிவு, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாகக் கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடியது.

வழக்கத்தை விட நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு மழை நீர் ஓடுகிறது. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக, பொது பேருந்து போக்குவரத்து இல்லை என்றாலும் கணுவாயில் இருந்து பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்வதால் பொதுமக்கள் பாலத்தைக் கடக்க முடியாமல் வேறு பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், கோபனேரி பகுதியில் வெள்ளியங்கிரி என்பவரின் வீடு மழையின் காரணமாக ஒரு புறம் இடிந்தது.

இந்நிலையில், கனமழையின் காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாகக் கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தொடரும் கனமழை.. 5 மாவட்டங்களில் இன்று(நவ.9) பள்ளிகளுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.