ETV Bharat / state

"பல கொலைகளை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார்"- தனபால் மீண்டும் பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 3:20 PM IST

Driver Kanagaraj's Brother Dhanapal: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் இரண்டாம் கட்ட விசாரணைக்கு இன்று (செப்.26) ஆஜரானார்.

kodanad murder case
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு

கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டி

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்குச் செல்லும் முன்பு கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘முதல் கட்ட விசாரணையில் 40க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள்.

மேலும், இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகளை யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லி இருக்கிறார். இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர்.

இப்போது நேர்மையான அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளைச்சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதும் செய்ய மாட்டார். சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். திமுக ஆட்சியில் மேல்மட்ட அதிகாரிகள் மட்டும்தான் மாறி உள்ளனர்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கீழ்மட்ட அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பணி செய்து வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும், பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கிறேன். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் சதித் திட்டம் போடப்பட்டு, ஐந்து நாட்கள் கனகராஜை மூளைச்சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் தெரிய வரும். மேலும், எடப்பாடி உடன் இளங்கோவன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் முதல்கட்ட விசாரணையில் 50க்கும் மேற்பட்டவர்களின் பெயரை சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வாக்குமூலமாக கூறியிருப்பதாக கனகராஜ் சகோதரர் தனபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Bangalore Bandh : பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்! தமிழக பேருந்துகள், வாகனங்கள் இயங்கவில்லை!

கனகராஜின் சகோதரர் தனபால் பேட்டி

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்குச் செல்லும் முன்பு கனகராஜின் சகோதரர் தனபால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘முதல் கட்ட விசாரணையில் 40க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள்.

மேலும், இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகளை யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லி இருக்கிறார். இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர்.

இப்போது நேர்மையான அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளைச்சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதும் செய்ய மாட்டார். சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். திமுக ஆட்சியில் மேல்மட்ட அதிகாரிகள் மட்டும்தான் மாறி உள்ளனர்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘கீழ்மட்ட அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் பணி செய்து வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும், பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கிறேன். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் சதித் திட்டம் போடப்பட்டு, ஐந்து நாட்கள் கனகராஜை மூளைச்சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் அனைத்து உண்மைகளும் தெரிய வரும். மேலும், எடப்பாடி உடன் இளங்கோவன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் முதல்கட்ட விசாரணையில் 50க்கும் மேற்பட்டவர்களின் பெயரை சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வாக்குமூலமாக கூறியிருப்பதாக கனகராஜ் சகோதரர் தனபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Bangalore Bandh : பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்! தமிழக பேருந்துகள், வாகனங்கள் இயங்கவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.