ETV Bharat / state

ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம் தெரிகிறது - ஆர்.எஸ். பாரதி

author img

By

Published : Dec 24, 2020, 1:43 PM IST

கோவை: ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம் தெரிகிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  பெரியார் 47வது நினைவு தினம்  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு  DMK Organization Secretary RS Bharathi Press Conference  DMK Organization Secretary RS Bharathi  Periyar 47th Remembrance Day  கோவை மாவட்டச் செய்திகள்  Coimbatore District News
DMK Organization Secretary RS Bharathi Press Meet

தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  பெரியார் 47வது நினைவு தினம்  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு  DMK Organization Secretary RS Bharathi Press Conference  DMK Organization Secretary RS Bharathi  Periyar 47th Remembrance Day  கோவை மாவட்டச் செய்திகள்  Coimbatore District News
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த ஆர்.எஸ். பாரதி

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஏற்ப வரும் ஜனவரி 10ஆம் தேதிவரை திமுக சார்பில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அமைச்சர் வேலுமணி ஊழல்

இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். அராஜக, ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர் வேலுமணியின் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வருகிறோம். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் ஆர்.எஸ். பாரதி

அதிமுக ஊழல்கள்

இதனை மக்களிடம் விளக்கும் வகையில் கிராம சபைகள் நடைபெறுகின்றன. அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விவரித்து திமுகவினர் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர்.

அதிமுக ஆட்சியை ஒழிக்கும் முனைப்பில் திமுக

அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டுமென திமுக இறங்கியுள்ளது வரலாறு காணாத எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகத் தெரிகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'ஆட்சி மாற்றம் நடந்தவுடன் ஊழல் புகார் மீது நடவடிக்கை பாயும்' - ஆர்.எஸ். பாரதி

தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் 47ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை சுந்தராபுரம் அடுத்த குறிச்சி பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ். பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  பெரியார் 47வது நினைவு தினம்  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு  DMK Organization Secretary RS Bharathi Press Conference  DMK Organization Secretary RS Bharathi  Periyar 47th Remembrance Day  கோவை மாவட்டச் செய்திகள்  Coimbatore District News
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த ஆர்.எஸ். பாரதி

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஏற்ப வரும் ஜனவரி 10ஆம் தேதிவரை திமுக சார்பில் 16 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அமைச்சர் வேலுமணி ஊழல்

இந்த ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். அராஜக, ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர் வேலுமணியின் பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டுசென்று வருகிறோம். அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் ஆர்.எஸ். பாரதி

அதிமுக ஊழல்கள்

இதனை மக்களிடம் விளக்கும் வகையில் கிராம சபைகள் நடைபெறுகின்றன. அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை விவரித்து திமுகவினர் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர்.

அதிமுக ஆட்சியை ஒழிக்கும் முனைப்பில் திமுக

அதிமுக ஆட்சியை ஒழிக்க வேண்டுமென திமுக இறங்கியுள்ளது வரலாறு காணாத எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகத் தெரிகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'ஆட்சி மாற்றம் நடந்தவுடன் ஊழல் புகார் மீது நடவடிக்கை பாயும்' - ஆர்.எஸ். பாரதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.