ETV Bharat / state

பொள்ளாச்சியில் அம்மை நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள் - விவசாயிகள் வேதனை

author img

By

Published : Jan 2, 2023, 3:19 PM IST

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கி உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Etv Bharatபொள்ளாச்சியில் அம்மை நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள் - விவசாயிகள் வேதனை
Etv Bharatபொள்ளாச்சியில் அம்மை நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள் - விவசாயிகள் வேதனை
பொள்ளாச்சியில் அம்மை நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள் - விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்களும் தென்னை மரங்களும் தான். இயல்பாகவே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஊர் என்பதால், தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது.

விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் ஏராளமான ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். விவசாயத்திற்கு கால்நடைகள் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் அம்மை நோயினால் உயிரிழக்கும் மாடுகளை தங்கள் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.

இந்த நோயினால் உயிரிழக்கும் மாடுகளை இழந்த விவசாயிகள் கூறும் போது, ‘அம்மைநோயில் பாதிக்கப்படும் மாடுகளின் கால்களில் முதலில் வீக்கம் உண்டாகிறது. அதைத்தொடர்ந்து உடலில் கொப்பளங்கள் ஏற்படுகிறது. அதனால் சோர்ந்து போகும் மாடுகள் தீவனம் உட்கொள்ள முடியாத நிலையில், கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது.

இந்த நோயின் தாக்கம் ஏற்படும் மாடுகளால் படுக்க முடியாது. 15 அல்லது 20 நாட்களுக்கு நின்றவாறே இருக்கும். மற்ற மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க பாதிப்பு ஏற்பட்ட மாட்டை தனியாக வைத்து பராமரித்து வருகிறோம். நோயின் காரணமாக தண்ணீர் மற்றும் தீவனம் உட்கொள்ளாத நிலை ஏற்படுகிறது. இதனால் பால் உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது’ எனத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த நோயின் தாக்குதல் வேகமாக பரவி பொள்ளாச்சி வடக்கு ஒன்றியப் பகுதிகளில் மட்டும் அதிகளவில் உள்ளது குறிப்பாக சினைமாடுகளை குறிவைத்து தாக்குகிறது. இதனால் கருக்கலைந்து விடுவதால் கன்று குட்டிகள் ஈன்று எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

அம்மை நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளும் இல்லாததால் தங்களுக்கு தெரிந்த பழைய வைத்தியங்களை செய்து வருவதாக கூறும் விவசாயிகள் கால்நடைத்துறை மருத்துவர்கள், இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதனால் தான் இந்த நோய் மளமளவென பரவி வருகிறது.

தற்போது பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் வர உள்ளது. பொங்கல் என்றாலே வருடம் முழுவதும் விவசாயத்திற்கு பாடுபடும் கால்நடைகளுக்கு மரியாதை செய்து வழிபடுவது தான் முக்கிய நிகழ்வாகும். அவ்வாறு முக்கிய விழா கொண்டாட உள்ள நிலையில், கால்நடைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது மிகுந்த மனவேதனை அழிப்பதாக கூறும் விவசாயிகள் பாசத்துடன் வளர்க்கும் கால்நடைகள் அம்மை நோயால் உயிரிழக்கும்போது தங்களது சொந்த நிலத்திலேயே குழிதோண்டி புதைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் அரசு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு, மேலும் பரவாமல் தடுத்து கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அம்மை நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்று கால்நடைத்துறை மருத்துவர்களை கேட்டபோது உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல், தங்களால் எந்தப் பதிலும் கூற முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி கால்நடைகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:ஓசூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் சிரமம்!

பொள்ளாச்சியில் அம்மை நோய் தாக்கி உயிரிழக்கும் மாடுகள் - விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்களும் தென்னை மரங்களும் தான். இயல்பாகவே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஊர் என்பதால், தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது.

விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் ஏராளமான ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். விவசாயத்திற்கு கால்நடைகள் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் அம்மை நோயினால் உயிரிழக்கும் மாடுகளை தங்கள் தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர்.

இந்த நோயினால் உயிரிழக்கும் மாடுகளை இழந்த விவசாயிகள் கூறும் போது, ‘அம்மைநோயில் பாதிக்கப்படும் மாடுகளின் கால்களில் முதலில் வீக்கம் உண்டாகிறது. அதைத்தொடர்ந்து உடலில் கொப்பளங்கள் ஏற்படுகிறது. அதனால் சோர்ந்து போகும் மாடுகள் தீவனம் உட்கொள்ள முடியாத நிலையில், கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது.

இந்த நோயின் தாக்கம் ஏற்படும் மாடுகளால் படுக்க முடியாது. 15 அல்லது 20 நாட்களுக்கு நின்றவாறே இருக்கும். மற்ற மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க பாதிப்பு ஏற்பட்ட மாட்டை தனியாக வைத்து பராமரித்து வருகிறோம். நோயின் காரணமாக தண்ணீர் மற்றும் தீவனம் உட்கொள்ளாத நிலை ஏற்படுகிறது. இதனால் பால் உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது’ எனத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த நோயின் தாக்குதல் வேகமாக பரவி பொள்ளாச்சி வடக்கு ஒன்றியப் பகுதிகளில் மட்டும் அதிகளவில் உள்ளது குறிப்பாக சினைமாடுகளை குறிவைத்து தாக்குகிறது. இதனால் கருக்கலைந்து விடுவதால் கன்று குட்டிகள் ஈன்று எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

அம்மை நோயைக் கட்டுப்படுத்த மருந்துகளும் இல்லாததால் தங்களுக்கு தெரிந்த பழைய வைத்தியங்களை செய்து வருவதாக கூறும் விவசாயிகள் கால்நடைத்துறை மருத்துவர்கள், இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதனால் தான் இந்த நோய் மளமளவென பரவி வருகிறது.

தற்போது பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் வர உள்ளது. பொங்கல் என்றாலே வருடம் முழுவதும் விவசாயத்திற்கு பாடுபடும் கால்நடைகளுக்கு மரியாதை செய்து வழிபடுவது தான் முக்கிய நிகழ்வாகும். அவ்வாறு முக்கிய விழா கொண்டாட உள்ள நிலையில், கால்நடைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது மிகுந்த மனவேதனை அழிப்பதாக கூறும் விவசாயிகள் பாசத்துடன் வளர்க்கும் கால்நடைகள் அம்மை நோயால் உயிரிழக்கும்போது தங்களது சொந்த நிலத்திலேயே குழிதோண்டி புதைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில் அரசு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு, மேலும் பரவாமல் தடுத்து கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அம்மை நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்று கால்நடைத்துறை மருத்துவர்களை கேட்டபோது உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல், தங்களால் எந்தப் பதிலும் கூற முடியாது என்று தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி கால்நடைகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:ஓசூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் சிரமம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.