தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தொற்று நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதற்கிடையில் கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 24 ஆயிரத்து 443 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தற்போது நான்காயிரத்து 859 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் சிகிச்சைப் பலனின்றி மாவட்டத்தில் 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விமான நிலைய கழிவறையில் துப்பாக்கித் தோட்டாக்கள்: காவல் துறை விசாரணை!