ETV Bharat / state

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராடியும் இளைஞரைக் காப்பாற்ற முடியாத சோகம் - college students dies in road accident

கோவை: விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இளைஞரை தமுமுக ஆம்புலன்ஸ் ஊழியர்களும் பொதுமக்களும் காப்பற்ற கடுமையாக முயற்சி செய்தும், அவர் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவர்
கல்லூரி மாணவர்
author img

By

Published : Jan 24, 2020, 4:18 PM IST

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்சா, நசீர் ஆகியோர். இவர்கள் இருவரும் நேற்று கேரளாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பாலக்காடு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த கார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், இளைஞர் பாட்சா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நசீரை அங்கிருந்தவர்கள் கோவையைச் சேர்ந்த தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு 1 மணி நேரத்தில் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நசீர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
பொதுவாக கோவையிலிருந்து பாலக்காடு செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். தற்போது பாலக்காடு செல்லும் வழியான உக்கடம், அத்துப்பாலம் போன்ற முக்கிய பகுதிகளில் பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும். இந்த நிலையிலும் இளைஞர்கள் விபத்து குறித்து தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தெரிவிக்கப்பட்ட உடனே, அவர்கள் விரைந்து இளைஞரை காப்பற்றியாக வேண்டும் என்று விரைந்து சென்றாலும், இளைஞரின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்சா, நசீர் ஆகியோர். இவர்கள் இருவரும் நேற்று கேரளாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது பாலக்காடு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த கார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில், இளைஞர் பாட்சா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நசீரை அங்கிருந்தவர்கள் கோவையைச் சேர்ந்த தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு 1 மணி நேரத்தில் கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நசீர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
பொதுவாக கோவையிலிருந்து பாலக்காடு செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். தற்போது பாலக்காடு செல்லும் வழியான உக்கடம், அத்துப்பாலம் போன்ற முக்கிய பகுதிகளில் பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாகும். இந்த நிலையிலும் இளைஞர்கள் விபத்து குறித்து தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தெரிவிக்கப்பட்ட உடனே, அவர்கள் விரைந்து இளைஞரை காப்பற்றியாக வேண்டும் என்று விரைந்து சென்றாலும், இளைஞரின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது.
Intro:விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவரை காப்பாற்ற போராடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பொதுமக்கள்Body:கோவை குனியமுத்தூர் பகுதியை சார்ந்தவர்கள் பாட்சா மற்றும் நசீர் இவர்கள் இருவரும் கேரளாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பாலக்காடு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த கார் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் மோதியது இதில் பாட்சா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், நசீர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார் அவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாற்றிவிடலாம் மருத்துவ உதவியாளர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தமுமுக ஆம்புலன்ஸ் சேவையை அணுகினர். அங்கு வந்த ஆம்புலன்ஸில் நசீரை ஏற்றிக்கொண்டு 1மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. முன்னதாக பாலக்காடு அருகே இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் வருவது குறித்து கோவை குனியமுத்தூர் ஆத்துபாலம் உக்கடம் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தெரிவிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு ஒலிபெருக்கிகள் மூலம் மிக அவசரமாக ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதாகவும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் வழிவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர் இதனையடுத்து நசீர் ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றது உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நசீர் உயிரிழந்தார் இதனால் அங்கிருந்தவர்கள் சோகமடைந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.