ETV Bharat / state

குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை - கோவையில் சோகம்!

author img

By

Published : Oct 18, 2019, 5:12 PM IST

Updated : Oct 18, 2019, 6:43 PM IST

கோவை: ஒண்டிபுதூர் பகுதியில் குழந்தையை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தாய், குழந்தை தற்கொலை, Mother and child suicide in Kovai

கோவை ஒண்டிபுதூரில் வேதவள்ளி என்பவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் சகோதரர் மாதவனுடன் வசித்து வந்துள்ளார். வேதவள்ளியின் கணவர், அமெரிக்காவில் பணியாற்றிய போது உயிரிழந்தார். இந்நிலையில், வேதவள்ளியின் ஐந்து வயது மகள் கார்குழலிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி நேற்று இரவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேதவள்ளியின் பெற்றோரும், சகோதரும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது, வேதவள்ளி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கோவையில் தாய், குழந்தை தற்கொலை, Mother and child suicide in Kovai

பின்னர், சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில், கணவரை இழந்த சோகத்தில் இருந்த வேதவள்ளி, குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்றனர்.

இதையடுத்து, தந்தை ராமகிருஷ்ணன், சகோதரர் மாதவன் ஆகியோருடன் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் சலூன் கடை உரிமையாளர் தற்கொலை!

கோவை ஒண்டிபுதூரில் வேதவள்ளி என்பவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன், லீலாவதி மற்றும் சகோதரர் மாதவனுடன் வசித்து வந்துள்ளார். வேதவள்ளியின் கணவர், அமெரிக்காவில் பணியாற்றிய போது உயிரிழந்தார். இந்நிலையில், வேதவள்ளியின் ஐந்து வயது மகள் கார்குழலிக்கு உடல்நலம் சரியில்லை எனக் கூறி நேற்று இரவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேதவள்ளியின் பெற்றோரும், சகோதரும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது, வேதவள்ளி தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கோவையில் தாய், குழந்தை தற்கொலை, Mother and child suicide in Kovai

பின்னர், சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கூறுகையில், கணவரை இழந்த சோகத்தில் இருந்த வேதவள்ளி, குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்றனர்.

இதையடுத்து, தந்தை ராமகிருஷ்ணன், சகோதரர் மாதவன் ஆகியோருடன் சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்னையால் சலூன் கடை உரிமையாளர் தற்கொலை!

Intro:கோவை ஒண்டிபுதூர் பகுதியில் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Body:கோவை ஒண்டிபுதூர் ஸ்ரீ காமாட்சி நகரில் வேதவள்ளி என்பவர் தனது பெற்றோர் ராமகிருஷ்ணன் லீலாவதி மற்றும் தம்பி மாதவனுடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வந்துள்ளார் வேத வள்ளியின் கணவர் அமெரிக்காவில் வேலை பார்க்கும்போது இறந்துள்ளார் இதையடுத்து பெங்களூர் திரும்பிய நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் கோவையில் தனது பெற்றோர் தம்பியுடன் வந்து வசித்து வந்துள்ளார். பூர்வீகமான பட்டினத்தில் புதிதாக வீடு கட்டி வரும் .நிலையில் ஒண்டிபுதூர் ஸ்ரீ காமாட்சி நகரில் வசித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று இரவு வேதவள்ளியின் ஐந்து வயது மகள் கார்குழலி உடல்நலம் சரியில்லை எனக் கூறி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேதவல்லி பெற்றோரும் தம்பியும் அழைத்துச் சென்றுள்ளனர் ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் இது தொடர்பாக தகவல் அறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது வீடு பூட்டி இருந்ததால் ஜன்னலை உடைத்து பார்த்தபோது வீட்டில் தனியாக இருந்த வேதவள்ளி தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் நேற்று இரவு வீட்டில் வேதவள்ளி வீட்டில் இருந்து சத்தம் கேட்டதாகவும் அதன் பிறகு இந்த சம்பவம் அனைத்தும் நடந்ததாகவும் இந்த பகுதிக்கு குடி வந்ததில் இருந்தே அருகில் வசிப்பவர்கள் உடன் எந்த தொடர்பும் வேதவள்ளியின் குடும்பத்தினர் வைத்துக் கொண்டதில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர் முதலில் வேதவள்ளி 5 வயது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது மேலும் வீட்டில் உள்ள டிவி உடைந்து பொருட்கள் சிதறிக் கிடந்த உடன் ஆங்காங்கே ரத்த துளிகள் உள்ளது. வேதவள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து வேத வள்ளியின் தந்தை ராமகிருஷ்ணன் தம்பி மாதவன் ஆகியோருடன் சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Conclusion:
Last Updated : Oct 18, 2019, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.