ETV Bharat / state

சாலையில் நடந்துசென்ற யானைகளால் வாகன நெரிசல்

author img

By

Published : Jan 2, 2020, 2:34 PM IST

கோவை: வெள்ளகிணறு பகுதியில் யானைகள் சாலையில் நடந்துசென்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

Coimbatore - Mettupalayam road
Coimbatore elephant

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பன்னிமடை, வரப்பாளையம் பகுதியிலிருந்து வெள்ளகிணறு பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் வழி மாறி வந்துள்ளன.

வழிமாறி வந்த காட்டுயானைகள் காட்டுக்குள் செல்ல வழி தெரியாமல் சுமார் 10 நிமிடம் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நடந்துசென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கே வாகன நெரிசல் ஏற்பட்டது. 10 நிமிடங்கள் கழித்து சாலையில் நடந்துசென்ற காட்டு யானைகள், ஊருக்குள் சென்றன. அதன்பின் அங்கு வாகனங்கள் அனைத்தும் சீராகச் செல்ல தொடங்கின.

சாலையில் நடந்துசென்ற யானைகள்

அப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற காட்டு யானைகள் வழிமாறி காட்டிற்குள்ளிருந்து தேசிய நெடுஞ்சாலை வருகின்றன. அதனால் அங்கு அதிகமாக வாகன நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இதையும் படிக்க: மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சியை இனி தொடர்பு கொள்ளலாம்!

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் பன்னிமடை, வரப்பாளையம் பகுதியிலிருந்து வெள்ளகிணறு பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் வழி மாறி வந்துள்ளன.

வழிமாறி வந்த காட்டுயானைகள் காட்டுக்குள் செல்ல வழி தெரியாமல் சுமார் 10 நிமிடம் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நடந்துசென்றதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கே வாகன நெரிசல் ஏற்பட்டது. 10 நிமிடங்கள் கழித்து சாலையில் நடந்துசென்ற காட்டு யானைகள், ஊருக்குள் சென்றன. அதன்பின் அங்கு வாகனங்கள் அனைத்தும் சீராகச் செல்ல தொடங்கின.

சாலையில் நடந்துசென்ற யானைகள்

அப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற காட்டு யானைகள் வழிமாறி காட்டிற்குள்ளிருந்து தேசிய நெடுஞ்சாலை வருகின்றன. அதனால் அங்கு அதிகமாக வாகன நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இதையும் படிக்க: மரக்கிளைகளை அகற்ற மாநகராட்சியை இனி தொடர்பு கொள்ளலாம்!

Intro:கோவையில் சாலையில் நடந்து சென்ற யானைகளால் வாகன நெரிசல்Body:கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தாய் யானை மட்டும் குட்டி யானை சாலையில் நடந்து சென்றதால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 5 மணியளவில் பன்னிமடை, வரப்பாளையம் பகுதியிலிருந்து வெள்ளகிணறு பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் வழி மாறி வந்துள்ளது. வழிமாறி வந்த காட்டுயானைகள் காடு எங்கே என்று தெரியாமல் சுமார் 10 நிமிடம் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றதால் அங்குள்ள மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அங்கே வாகன நெரிசல் ஏற்பட்டது. 10 நிமிடங்கள் கழித்து சாலையில் நடந்து சென்ற காட்டுயானைகள் ஊருக்குள் சென்றன அதன்பின் அங்கு வாகனங்கள் அனைத்தும் சீராக செல்ல தொடங்கின.

அப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்ற காட்டுயானைகள் வழிமாறி காட்டிற்குள் இருந்து தேசிய நெடுஞ்சாலை வந்து விடுகின்றன அதனால் அங்கு அதிகமாக வாகன நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தடுக்க வனத்துறையினரும் தங்களால் முடிந்தவரை காட்டுயானைகளை காட்டுக்குள்ளேயே இருப்பதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.