ETV Bharat / state

கூட்டமாய் வந்து தண்ணீர் பருகி தாகம் தணித்த யானைகள்! வீடியோ வைரல்

கோவை: கங்கா சேம்பர் என்ற இடத்தில் யானைகள் கூட்டமாக வந்து, தண்ணீர் குடித்துச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாததே யானைகள் வருவதற்குக் காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

author img

By

Published : Apr 3, 2019, 12:18 PM IST

கோவை

தற்போது கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வனப்பகுதிகளில் வாழும் வன உயிரினங்கள் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது அதிகமாகியுள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது அதிகரித்துவருகிறது. நேற்று மாலை ஆணைக்கட்டி பகுதியில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி யானைகள் கூட்டம்கூட்டமாக வந்துள்ளன. இதில் குட்டி யானை உள்பட 9 யானைகள் கங்கா சேம்பர் என்ற இடத்தில் வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்துச் சென்றன.

யானைகள் தண்ணீர் குடிக்கும் காட்சி

இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாததே யானைகள் வருவதற்குக் காரணமென குற்றம்சாட்டிய பொதுமக்கள், போதியளவு தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வனப்பகுதிகளில் வாழும் வன உயிரினங்கள் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது அதிகமாகியுள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது அதிகரித்துவருகிறது. நேற்று மாலை ஆணைக்கட்டி பகுதியில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி யானைகள் கூட்டம்கூட்டமாக வந்துள்ளன. இதில் குட்டி யானை உள்பட 9 யானைகள் கங்கா சேம்பர் என்ற இடத்தில் வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்துச் சென்றன.

யானைகள் தண்ணீர் குடிக்கும் காட்சி

இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாததே யானைகள் வருவதற்குக் காரணமென குற்றம்சாட்டிய பொதுமக்கள், போதியளவு தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சு.சீனிவாசன்.           கோவை


கோவை அருகே வனப்பகுதியில் நிலவும் வறட்சியினால் தண்ணீர் தேடி யானைகள் கூட்டங் கூட்டமாக அலைந்து வருகின்றன...


கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம். தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால்  தண்ணீர் வனவிலங்குகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஆனைக்கட்டி பகுதியில தாகம் தீர்க்க் தண்ணீர் தேடி யானைகள் கூட்டங்கூட்டமாக வந்துள்ளன. குட்டி உள்ளிட்ட 9 யானைகள் கூட்டமாக கங்கா சேம்பர் என்ற இடத்திற்கு வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்து சென்றன. இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரபாபாததே யானைகள் வருவதற்கு காரணமெனவும், போதியளவு தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்...
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.