ETV Bharat / state

கோவையில் இன்று 213 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Nov 7, 2020, 9:13 PM IST

கோயம்புத்தூர்: இன்று (நவ 7) ஒரே நாளில் 213 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் இன்று 213 பேர் கரோனாவிற்கு அனுமதி
கோவையில் இன்று 213 பேர் கரோனாவிற்கு அனுமதி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 213 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்றுவந்த 213 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 317 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது குழந்தைக்கு MIS-C என்ற நோய் (அதிக காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், வாய்ப்புண், கை கால் வீக்கம்) இருப்பது தெரியவந்தது. இதனைச் சரிசெய்ய இம்யூனோகுலோபின் (Immunoglobulin) என்ற 1.25 லட்சம் மதிப்புள்ள ஊசி தேவைப்பட்டது.

இதனை உடனடியாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஏற்பாடு செய்து அந்தக் குழந்தைக்குச் செலுத்தி பூரணமாகக் குணப்படுத்தினர். விலை உயர்ந்த அந்த ஊசியை விரைவில் ஏற்பாடு செய்ததால் அந்தக் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதனால் குழந்தையின் பெற்றோர், உறவினர் மருத்துவமனை முதல்வர், மருத்துவர்களைப் பாராட்டிவருகின்றனர். கோவை மாவட்டத்திலும் மருத்துவமனை முதல்வருக்கும் மருத்துவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க... கோவை ராஜவீதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 213 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 889 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்றுவந்த 213 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 317 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்துள்ளது.

கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது குழந்தைக்கு MIS-C என்ற நோய் (அதிக காய்ச்சல், கழுத்தில் நெறி கட்டுதல், வாய்ப்புண், கை கால் வீக்கம்) இருப்பது தெரியவந்தது. இதனைச் சரிசெய்ய இம்யூனோகுலோபின் (Immunoglobulin) என்ற 1.25 லட்சம் மதிப்புள்ள ஊசி தேவைப்பட்டது.

இதனை உடனடியாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஏற்பாடு செய்து அந்தக் குழந்தைக்குச் செலுத்தி பூரணமாகக் குணப்படுத்தினர். விலை உயர்ந்த அந்த ஊசியை விரைவில் ஏற்பாடு செய்ததால் அந்தக் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதனால் குழந்தையின் பெற்றோர், உறவினர் மருத்துவமனை முதல்வர், மருத்துவர்களைப் பாராட்டிவருகின்றனர். கோவை மாவட்டத்திலும் மருத்துவமனை முதல்வருக்கும் மருத்துவர்களுக்கும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதையும் படிங்க... கோவை ராஜவீதியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.