ETV Bharat / state

முதல்வர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு!

author img

By

Published : Mar 22, 2019, 8:02 PM IST

பொள்ளாச்சி : தேர்தல் ஆணையம் உத்தரவையும் மீறி புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி வழக்கறிஞர் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார்.

ஷாநவாஸ் கான்

கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள்பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனைத்தொடர்ந்து, நடக்க இருக்கின்ற மக்களவை தேர்தலில் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களின் பிரச்சாரக்கூட்டம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருமந்துறையில் அதிமுக சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சாரக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,புல்வாமா தாக்குதலில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விரிவாக பேசிய முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கூறியிருந்தார். புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்தும் அந்த தடையை மீறி முதல்வர் பழனிசாமி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் என்பவர் முதல்வர் பழனிசாமி மீது கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

இதில், முதல்வர் பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை மீறி நாட்டு மக்களிடையே தவறான எண்ணத்தை திணிக்கிறார். தேர்தல் நேரத்தில் ராணுவ வீரர்கள் பற்றி பேசுவது முறையற்றதாகும். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் இது போன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள்பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இதனைத்தொடர்ந்து, நடக்க இருக்கின்ற மக்களவை தேர்தலில் புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களின் பிரச்சாரக்கூட்டம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருமந்துறையில் அதிமுக சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இந்த பிரச்சாரக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது,புல்வாமா தாக்குதலில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விரிவாக பேசிய முதல்வர் பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கூறியிருந்தார். புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்தும் அந்த தடையை மீறி முதல்வர் பழனிசாமி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் என்பவர் முதல்வர் பழனிசாமி மீது கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் புகார் மனு அளித்தார்.

இதில், முதல்வர் பழனிசாமி தேர்தல் விதிமுறைகளை மீறி நாட்டு மக்களிடையே தவறான எண்ணத்தை திணிக்கிறார். தேர்தல் நேரத்தில் ராணுவ வீரர்கள் பற்றி பேசுவது முறையற்றதாகும். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் இது போன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் உத்தரவையும் மீறி புல்வாமா தாக்குதல்  குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி வழக்கறிஞர் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு
பொள்ளாச்சி : மார்ச் : 22
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடந்த மாதம் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இந்திய ராணுவ வீரர்கள்  மரணத்தைப் பற்றிய அந்த தாக்குதல் தொடர்பான  நிகழ்வுகள் பற்றியோ தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது இந்நிலையில் இன்று காலை சேலம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமந்துறை ஊராட்சியில் அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது இந்திய தேர்தல் ஆணையம் பேசுவதற்கு தடை விதித்துள்ள புல்வாமா தாக்குதலைப் பற்றி பாகிஸ்தான் நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றியும் விரிவாகப் பேசியுள்ள முதல்வர்  பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தர வேண்டும் பேசினார்  இது  தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக நாட்டு மக்களிடையே தவறான ஒரு வழிகாட்டுதலையும் எண்ணத்தையும் ஏற்படுத்துவதுடன் இந்திய ராணுவ வீரர்கள் மீது மாற்றுக் கருத்து ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடும் எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போன் இது போன்ற பிரச்சாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி வழக்கறிஞர் ஷாநவாஸ் கான் இன்று கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.