ETV Bharat / state

வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்ற பிரான்ஸ் குடியிருப்பு வாசி உயிரிழப்பு!

author img

By

Published : Apr 22, 2019, 8:33 AM IST

கோவை: பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவர் பூண்டி வெள்ளியங்கிரி மலைக் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்.

பிரானஸ் குடியுரிமை பெற்ற நபர் உயிரிழப்பு

பாண்டிச்சேரியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக சனிக்கிழமை இரவு, கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளனர். இதில், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்று, பாண்டிச்சேரியில் வசித்து வந்த அருள்தாஸ் என்பவரும் இவர்களுடன் வந்திருந்தார்.

இந்நிலையில், பூண்டி மலைக்கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்வதற்காக அருள்தாஸும் அவரது குழுவினரும் புறப்பட்டனர். அன்று இரவு நான்கு மலைகளைக் கடந்து 5வது மலைக்கு ஏறும் பொழுது அருள்தாஸுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு மற்றவர்கள் அவரை எழுப்ப முயன்றனர், ஆனால் மூச்சுத்திணறல் அதிகமாகி அவர் உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து, ஆலந்துறை காவல்துறையினர், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மலைவாழ் மக்களின் உதவியோடு அருள்தாஸின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்பு, ஆலந்துறை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரானஸ் குடியுரிமை பெற்ற நபர் உயிரிழப்பு

பாண்டிச்சேரியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக சனிக்கிழமை இரவு, கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளனர். இதில், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்று, பாண்டிச்சேரியில் வசித்து வந்த அருள்தாஸ் என்பவரும் இவர்களுடன் வந்திருந்தார்.

இந்நிலையில், பூண்டி மலைக்கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்வதற்காக அருள்தாஸும் அவரது குழுவினரும் புறப்பட்டனர். அன்று இரவு நான்கு மலைகளைக் கடந்து 5வது மலைக்கு ஏறும் பொழுது அருள்தாஸுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு மற்றவர்கள் அவரை எழுப்ப முயன்றனர், ஆனால் மூச்சுத்திணறல் அதிகமாகி அவர் உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து, ஆலந்துறை காவல்துறையினர், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மலைவாழ் மக்களின் உதவியோடு அருள்தாஸின் உடல் கீழே கொண்டுவரப்பட்டது. பின்பு, ஆலந்துறை காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரானஸ் குடியுரிமை பெற்ற நபர் உயிரிழப்பு
சு.சீனிவாசன்.      கோவை


கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்ற பிரான்ஸ் குடியுரிமை பெற்ற பக்தர் உயிரிழப்பு

கோவை பூண்டி மலைக்கு பாண்டிச்சேரியில் இருந்து 20-க்கும் மேற்பட்டோர் குழுக்களாக நேற்று இரவு வந்துள்ளனர் பாண்டிச்சேரியைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரும் வந்துள்ளார்.இவர் பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையை பெற்றவர் தற்போது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்  பூண்டி மலைக் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதற்காக நேற்று இரவு சென்று உள்ளார் 4 மலை ஏறி பின்பு ஐந்தாவது மலையை அடைந்து பொழுது மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் அருகில் இருந்தவர்கள் பரிசோதித்து பார்க்கும் பொழுது இறந்தது தெரியவந்துள்ளது உடனடியாக ஆலந்துறை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் ஞாயிற்றுக்கிழமை   மலையிலிருந்து மலைவாழ் மக்களின் உதவியோடு அவருடைய உடல் கீழே கொண்டுவரப்பட்டது பின்பு ஆலந்துறை காவல்துறையினர் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.