ETV Bharat / state

இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் கைது! - பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோவை மருத்துவர் கைது

கோவை : தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.

coimbatore
author img

By

Published : Mar 30, 2019, 9:45 PM IST

கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கெளதம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் 65 வயதுள்ள சிறுநீரக மருத்துவர் ராமலிங்கம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் தனது தாயை சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, சிகிச்சைக்காக வந்த தனது தாயை விட்டுவிட்டு இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்வதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த போலீஸார் மருத்துவர் ராமலிங்கத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கெளதம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் 65 வயதுள்ள சிறுநீரக மருத்துவர் ராமலிங்கம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் தனது தாயை சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, சிகிச்சைக்காக வந்த தனது தாயை விட்டுவிட்டு இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்வதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த போலீஸார் மருத்துவர் ராமலிங்கத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சு.சீனிவாசன்.       கோவை


கோவையில் தாயின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவையில் அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை சந்திப்பு அருகில் கௌதம் கிளினிக் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.  இங்கு 65 வயதான பிரபல சிறுநீரக மருத்துவர் ராமலிங்கம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு செல்வபுரத்தை சேர்ந்த 26 வயது பெண் தன் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது மருத்துவர் ராமலிங்கம், தாயை விட்டுவிட்டு மகளின் உடலை தொட்டு பார்த்து பரிசோதனை செய்வது போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சில்மிஷம் செய்த மருத்துவர் ராமலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் நடந்தேறி வரும் இதுபோன்ற பாலியல் வன்மங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது கோவை மக்களிடையே எழுந்துள்ளது.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.