ETV Bharat / state

கோயில் சுற்றுச்சுவர் இடிப்பு - பாஜக எதிர்ப்பு

author img

By

Published : Aug 4, 2022, 3:57 PM IST

ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கோயில் சுற்றுச்சுவரை அகற்றவந்த மாநகராட்சி அலுவலர்களை எதிர்த்து பாஜக இந்து முன்னணி அமைப்பினர் 'ஓம் நமச்சிவாயா' எனப் பாடல் பாடினர்.

Etv Bharat கோயில் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்
Etv Bharat கோயில் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்

கோயம்புத்தூர்: கோல்டுவின்ஸ் திருமுருகன் நகரில் சுயம்பு தம்புரான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலைச்சுற்றி மாநகராட்சி இடத்தினை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று (ஆக. 4) காலை பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அலுவலர்கள் சுற்றுச்சுவரை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்புத்தெரிவித்து அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.

அப்போது அங்கு திரண்ட பெண்கள் 'ஓம் நமச்சிவாயா' எனப் பாடல் பாடி, கோயில் சுவரை இடிப்பதற்கு கண்ணீர் மல்க எதிர்ப்பைத்தெரிவித்தனர். பாஜக, இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோயில் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்

இதையும் படிங்க: தந்தூரி சிக்கனுக்கு மயோனிஸ் கேட்ட வாடிக்கையாளருடன் மல்லுகட்டிய ஓட்டல் ஊழியர்கள்; வைரலாகும் வீடியோ

கோயம்புத்தூர்: கோல்டுவின்ஸ் திருமுருகன் நகரில் சுயம்பு தம்புரான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலைச்சுற்றி மாநகராட்சி இடத்தினை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் கோவை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று (ஆக. 4) காலை பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அலுவலர்கள் சுற்றுச்சுவரை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்புத்தெரிவித்து அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவரை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.

அப்போது அங்கு திரண்ட பெண்கள் 'ஓம் நமச்சிவாயா' எனப் பாடல் பாடி, கோயில் சுவரை இடிப்பதற்கு கண்ணீர் மல்க எதிர்ப்பைத்தெரிவித்தனர். பாஜக, இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கோயில் சுற்றுச்சுவர் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்

இதையும் படிங்க: தந்தூரி சிக்கனுக்கு மயோனிஸ் கேட்ட வாடிக்கையாளருடன் மல்லுகட்டிய ஓட்டல் ஊழியர்கள்; வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.