ETV Bharat / state

சினிமா ஆசை, மூக்கு சர்ஜரி செய்த அங்கோடா லொக்கா! - மூக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தகவல்

கோயம்புத்தூர்: அங்கோடா லொக்கா சினிமாவில் நடிப்பதாகக் கூறி, தனது மூக்கை அறுவை சிகிச்சை (plastic surgery) செய்து, கோவையில் தங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

அங்கொடா லொக்கா
அங்கொடா லொக்கா
author img

By

Published : Aug 7, 2020, 7:32 PM IST

இலங்கையைச் சேர்ந்த நிழலுலக தாதா அங்கோடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு - குற்றப்புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், அங்கோடா லொக்கா மதுரையில் தங்கியிருந்த பல்வேறு வீடுகள், தொடர்புள்ள இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று (ஆக. 6) மதுரை கூடல் நகர் அருகே உள்ள ரயிலார் நகர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் கைது செய்யப்பட்ட சிவகாமி சுந்தரியின் முன்னாள் கணவர் வினோத் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாகக் கூறி, மதுரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில், கடந்த ஜனவரி மாதம் இறுதியில் லொக்கா தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்தது, சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூக்கை அறுவை சிகிச்சை மருத்துவமனை
லொக்கா தன் மூக்கை அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை

சிறிதாக இருந்த மூக்கை பெரியதாக மாற்றிக் கொண்டுள்ளார். அந்த மருத்துவமனையிலும் பிரதீப் சிங் என்ற பெயரில் தான் பெயர் பதிவு செய்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர் யார் அவரிடம் விசாரணை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக அறுவை சிகிச்சை செய்தார்? என்று சிபிசிஐடியினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அங்கொடா லொக்கா விவகாரம் குறி்த்து சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் விளக்கம்!

இலங்கையைச் சேர்ந்த நிழலுலக தாதா அங்கோடா லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு - குற்றப்புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், அங்கோடா லொக்கா மதுரையில் தங்கியிருந்த பல்வேறு வீடுகள், தொடர்புள்ள இடங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று (ஆக. 6) மதுரை கூடல் நகர் அருகே உள்ள ரயிலார் நகர் பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இதன்பின்னர் கைது செய்யப்பட்ட சிவகாமி சுந்தரியின் முன்னாள் கணவர் வினோத் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சினிமாவில் நடிக்க ஆசை இருப்பதாகக் கூறி, மதுரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில், கடந்த ஜனவரி மாதம் இறுதியில் லொக்கா தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்தது, சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மூக்கை அறுவை சிகிச்சை மருத்துவமனை
லொக்கா தன் மூக்கை அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை

சிறிதாக இருந்த மூக்கை பெரியதாக மாற்றிக் கொண்டுள்ளார். அந்த மருத்துவமனையிலும் பிரதீப் சிங் என்ற பெயரில் தான் பெயர் பதிவு செய்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர் யார் அவரிடம் விசாரணை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதற்காக அறுவை சிகிச்சை செய்தார்? என்று சிபிசிஐடியினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அங்கொடா லொக்கா விவகாரம் குறி்த்து சிவகாமசுந்தரியின் முன்னாள் கணவர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.