ETV Bharat / state

505 வாக்குறுதிகளில் 202 நிறைவேற்றப்பட்டுள்ளது - அமைச்சர் கயல்விழி

author img

By

Published : Oct 3, 2021, 3:58 AM IST

Updated : Oct 3, 2021, 6:53 AM IST

திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 202 நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

tn_cbe_07_pollachi_dmk_minister_vis_TN10008
tn_cbe_07_pollachi_dmk_minister_vis_TN10008

கோவை: திமுக தலைவர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் 505-இல் 202 நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்பகதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் கலையரசி சிலம்பரசன் என்பவர் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பூச்சனாரி, திவான்சாபுதூர், கணபதிபாளையம் பகுதிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.

இதனை தொடர்ந்து திவான்சாபுதூர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, பொள்ளாச்சி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தமிழ்மணி, நகரச் செயலாளர் வடுகைபழனிச்சாமி, நகர துணைத் தலைவர் கார்த்திகேயன், அமுதபாரதி, குள்ளக்காபாளையம் நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர், பல்வேறு மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், பல கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவரை மாணவர் விடுதிகள் வாடகை கட்டிடங்களில் செயல்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், திமுக தலைவர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் 505-இல் 202 நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க: உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்

கோவை: திமுக தலைவர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் 505-இல் 202 நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்பகதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் கலையரசி சிலம்பரசன் என்பவர் ஆட்டோ ரிக்க்ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பூச்சனாரி, திவான்சாபுதூர், கணபதிபாளையம் பகுதிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாக்கு சேகரித்தார்.

இதனை தொடர்ந்து திவான்சாபுதூர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, பொள்ளாச்சி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தமிழ்மணி, நகரச் செயலாளர் வடுகைபழனிச்சாமி, நகர துணைத் தலைவர் கார்த்திகேயன், அமுதபாரதி, குள்ளக்காபாளையம் நாகராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர், பல்வேறு மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், பல கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவரை மாணவர் விடுதிகள் வாடகை கட்டிடங்களில் செயல்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், திமுக தலைவர் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் 505-இல் 202 நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க: உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்

Last Updated : Oct 3, 2021, 6:53 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.