ETV Bharat / state

தொற்று இல்லாதவர்களுக்கு கரோனா முத்திரை: மாநகராட்சியை கண்டித்து பேனர்

author img

By

Published : Sep 6, 2020, 7:46 PM IST

கோயம்புத்தூர்: தொற்று இல்லாதவர்களுக்கு கரோனா இருப்பதாகக் கூறி முத்திரை குத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகள் என வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேனர் வைத்த குடும்பத்தினர்!
பேனர் வைத்த குடும்பத்தினர்!

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சாலை ஹோப் காலேஜ் அருகே ஒரு வீட்டில் கரோனா இல்லாதவர்களுக்கு தொற்று உள்ளது என்று கூறி முத்திரை குத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி எனது தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று கோவை மாநகராட்சி சார்பில் எனது குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் 3ஆம் தேதியன்று வெளியானது.

இதில் வீட்டு உரிமையாளர் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை எனக் கூறுகிறார். இந்நிலையில், அந்த வீட்டில் 4 பேருக்கும் கரோனா இருப்பதாகக் கூறி வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

பேனர் வைத்த குடும்பத்தினர்!

அதற்கு மறுநாள் தனியார் பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கு சென்று 4 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா இல்லாதவர்களை தவறாக தனிமைப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு தங்களின கண்டனங்களைத் தெரிவிக்க இந்த பேனர் வைக்கப்பட்டது என்றார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அவரது வீட்டை அறிவித்ததால் அக்கம் பக்கத்தினர் ஒரு மாதிரியாக பார்ப்பதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'முதலமைச்சரை வரவேற்க பேனர் கூடாது' - அமைச்சர் பெஞ்சமின்

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சாலை ஹோப் காலேஜ் அருகே ஒரு வீட்டில் கரோனா இல்லாதவர்களுக்கு தொற்று உள்ளது என்று கூறி முத்திரை குத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி எனது தந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று கோவை மாநகராட்சி சார்பில் எனது குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் 3ஆம் தேதியன்று வெளியானது.

இதில் வீட்டு உரிமையாளர் கரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை எனக் கூறுகிறார். இந்நிலையில், அந்த வீட்டில் 4 பேருக்கும் கரோனா இருப்பதாகக் கூறி வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

பேனர் வைத்த குடும்பத்தினர்!

அதற்கு மறுநாள் தனியார் பரிசோதனை ஆய்வுக் கூடத்திற்கு சென்று 4 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா இல்லாதவர்களை தவறாக தனிமைப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு தங்களின கண்டனங்களைத் தெரிவிக்க இந்த பேனர் வைக்கப்பட்டது என்றார்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என அவரது வீட்டை அறிவித்ததால் அக்கம் பக்கத்தினர் ஒரு மாதிரியாக பார்ப்பதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'முதலமைச்சரை வரவேற்க பேனர் கூடாது' - அமைச்சர் பெஞ்சமின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.