கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த வாட்டர் ஃபால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான டாட்டா சுமோ, பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி அதிகாலை 4 மணியளவில் எட்டு பேருடன் வந்து கொண்டிருந்தது.
அப்போது பனிமூட்டம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 250 அடி பள்ளத்தில் கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து அறிந்த பொதுமக்கள் உடனடியாக காடம்பாறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட வாட்டர் ஃபால் காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு!