ETV Bharat / state

ஊட்டச்சத்து குறித்து 100 வகை சிறுதானிய உணவுக் கண்காட்சி!

author img

By

Published : Sep 22, 2019, 8:40 AM IST

கோவை: பொள்ளாட்சியில் ஊட்டச்சத்து குறித்து கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை உள்ளிட்ட 100 வகை சிறுதானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகை கண்காட்சி நடைபெற்றது.

pollachi

மத்திய அரசின் திட்டமான போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளச்சியில் தெற்கு ஒன்றிய சமூகநலத் துறையின் கீழ் செயல்படும், வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் பங்கேற்ற சிறுதானிய உணவுக் கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது.

இதில், 97 அங்கன்வாடிகளைச் சேர்ந்த பணியாளர்கள் கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி பொங்கல், சுண்டல், பாசிப்பயிறு பாயசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். மேலும், அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட ‘ஊட்டச்சத்து பாப்பா’ வேடம் அணிந்து வந்து மாணவிகளிடம் காய்கறிகளில் உள்ள சத்துகள் குறித்து விளக்கினார்.

இதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பிரேமா ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசும்போது, "நமது முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானிய உணவுகளை மறந்து, ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்கின்றோம்.

பொள்ளாட்சியில் ஊட்டச்சத்து குறித்து 100 வகை சிறுதானிய உணவுக் கண்காட்சி

இதனால், ஊட்டச்சத்து பற்றாக்குறை உயரத்துக்கு ஏற்ற எடையின்மை, ரத்த சோகை, வயதுக்கு ஏற்ற உயரமின்மை போன்றவையால் பாதிப்பு அடைகிறோம். எனவே, இளம்பருவத்திலுள்ள மாணவ மாணவியர் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பருப்பு, பழங்கள், சிறுதானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

ஊட்டச்சத்து திட்டம் - மூன்று விருதுகளை அள்ளிய தமிழ்நாடு!

உண்ணும் உணவே நீங்கள்? உண்மை சொல்லும் தேசிய ஊட்டச்சத்து வாரம்!

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு

மத்திய அரசின் திட்டமான போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளச்சியில் தெற்கு ஒன்றிய சமூகநலத் துறையின் கீழ் செயல்படும், வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் பங்கேற்ற சிறுதானிய உணவுக் கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது.

இதில், 97 அங்கன்வாடிகளைச் சேர்ந்த பணியாளர்கள் கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி பொங்கல், சுண்டல், பாசிப்பயிறு பாயசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். மேலும், அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட ‘ஊட்டச்சத்து பாப்பா’ வேடம் அணிந்து வந்து மாணவிகளிடம் காய்கறிகளில் உள்ள சத்துகள் குறித்து விளக்கினார்.

இதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பிரேமா ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசும்போது, "நமது முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானிய உணவுகளை மறந்து, ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்கின்றோம்.

பொள்ளாட்சியில் ஊட்டச்சத்து குறித்து 100 வகை சிறுதானிய உணவுக் கண்காட்சி

இதனால், ஊட்டச்சத்து பற்றாக்குறை உயரத்துக்கு ஏற்ற எடையின்மை, ரத்த சோகை, வயதுக்கு ஏற்ற உயரமின்மை போன்றவையால் பாதிப்பு அடைகிறோம். எனவே, இளம்பருவத்திலுள்ள மாணவ மாணவியர் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பருப்பு, பழங்கள், சிறுதானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

ஊட்டச்சத்து திட்டம் - மூன்று விருதுகளை அள்ளிய தமிழ்நாடு!

உண்ணும் உணவே நீங்கள்? உண்மை சொல்லும் தேசிய ஊட்டச்சத்து வாரம்!

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு

Intro:functionBody:functionConclusion:ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவுகளை வளர்இளம் வயதினர் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என போசன் அபியான் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சியில் மத்திய அரசின் திட்டமான போசன் அபியான் திட்டத்தில் கீழ் ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இதை முன்னிட்டு
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணியாளர்கள் பங்கேற்ற சிறுதானிய உணவு கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திலுள்ள 97 அங்கன்வாடிகளை சேர்ந்த பணியாளர்கள், கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி பொங்கல், சுண்டல், பாசிப்பருப்பு பாயசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு சமைக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உணவு கண்காட்சியில் வைத்திருந்தனர். மேலும் அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட ‘ஊட்டச்சத்து பாப்பா’ வேடம் அணிந்து வந்து மாணவிகளிடம் காய்கறிகளில் உள்ள சத்துகள் குறித்து விளக்கினார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பிரேமா ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசும்போது, இன்றைய இளைய தலைமுறையினர், பசை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த மைதா மாவினை கொண்டு தயாரிக்கப்படும் புரோட்டா உள்ளிட்ட உணவு வகைகளை அதிகம் விரும்பி உட்கொள்கின்றனர். இந்த உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடியன. நமது முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானிய உணவுகளை மறந்து, ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதுடன், உணவை மருந்து போல குறைவாகவும், மருந்தினை உணவு போல் அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகின்றனர். மேலும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு, உயரத்துக்கு ஏற்ற எடையின்மை, ரத்த சோகை, வயத்துக்கு ஏற்ற உயரமின்மை ஆகியன ஏற்படுகிறது. வளர்இளம்பருவத்தில் உள்ள மாணவ மாணவிகள் ஊட்டசத்து நிறைந்த காய்கறி, பருப்பு, பழங்கள், சிறு தானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சிந்தியா, வளர் இளப்பருவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான  கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்புசத்து, விட்டமின், மினரல் ஆகிய  ஊட்டச்சத்துகளின் அளவுகளை படக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.