ETV Bharat / state

நான் சிறுவயதில் கடைக்காரரால் சாதி ரீதியாக பாதிப்புக்கு உள்ளானேன் – பா.ரஞ்சித்!

author img

By

Published : Jan 8, 2023, 5:42 PM IST

உணர்வுகளை வெளிப்படுத்த எழுத்துகள் மட்டுமே உதவும் என்றும், தனக்குள் உண்டான அழுத்தமே தனது திரைப்படங்களாக மாறியிருப்பதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

che
che

சென்னை: சார்பட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய எழுத்தாளர் தமிழ்ப்பிரபாவின் "கோசலை" என்ற நாவலின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகை பார்வதி, பாடகர் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகை பார்வதி பேசியபோது, "தங்கலான் திரைப்படத்தில் நான் நடிக்க வரும்போது தமிழ்ப்பிரபா எனக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிக்கும் என் கதாபாத்திரத்திற்கு நான் மட்டுமே தகுதியானவர் என்றும் சொன்னார். ஒரு எழுத்தாளர் அப்படி சொல்வது அரிது. எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அதனால் நான் இன்னும் இந்த புத்தகத்தை படிக்கவில்லை. கண்டிப்பாக நான் படிக்கும் முதல் தமிழ்ப் புத்தகம் கோசலை புத்தகமாகத்தான் இருக்கும்.

சமூகத்தில் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். பெண்களை தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்காக இந்த கோசலை என்ற கதாபாத்திரம் போல, நிஜ வாழ்க்கையில் வந்தால் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்" என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது, "அம்பேத்கரிடம் நான் கொண்ட புரிதலை மற்றவர்களுக்கு சொல்வதற்காகத் தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அதற்காகத்தான் நீலம் நிறுவனத்தை ஆரம்பித்தேன். இந்த நாவலை படிக்க ஆரம்பித்தபோது எனக்கு நன்றாக தூக்கம் வந்தது. திரைப்படங்களைக் காட்டிலும் எழுத்துகள் மட்டுமே என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.

நான் சிறுவயதில் கடைக்கு பந்து வாங்க சென்றபோது கடைக்காரரால் சாதி ரீதியாகப் பாதிக்கப்பட்டேன். உணர்வுகளை வெளிப்படுத்த எழுத்துகள் மட்டுமே உதவும். எனக்குள் உண்டான அழுத்தமே என் திரைப்படங்கள்.

பட்டியலின மக்களை சினிமாவில் காட்டுவதற்குக் கூட மாற்று எண்ணத்தை உருவாக்கிவிட்டோம். அவர்கள் சட்டை அணிய வேண்டுமா? காலணி போட வேண்டுமா? என்பதைப்போல. நாம் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டிய தேவை உள்ளது. அதை ஏற்கனவே நாம் உருவாக்கி உள்ளோம்" என்று கூறினார்.

பாடகர் அறிவு பேசியபோது, "கோசலை நாவலை சத்தமாக படித்ததால் என் தொண்டை கட்டிக் கொண்டது. என்னை சுற்றி வெறும் புத்தகங்கள் மட்டுமே இருக்கும். 'சிந்தனையாளன்' போன்ற புத்தகங்கள் இருக்கும். நான் படித்த ஒரு புத்தகத்தில் அதில் பெண்ணை நாயுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பார்கள். அதனால், நான் வாசிப்பதை நிறுத்த தொடங்கிவிட்டேன்.

ஒரு திரைப்படம் வெளியே வந்து, நம் கஷ்டங்களை வெளிக்கொண்டு வரும். நம் கதையைப் பேசும் ஒரு படம் வெளியே வருகிறது என்று நான் முதல் முதலில் பார்த்தது பா.ரஞ்சித் அவர்களின் திரைப்படம்தான். என் சிந்தனையைப் போன்று உள்ளது என்று பா.ரஞ்சித் அவர்களின் சிந்தனையால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்தான் நான். ஒரு சரியான புத்தகம் நமக்கு தருகின்ற அறிமுகம் ஒருநாளும் பொய்யாக போகாது.

இந்த நாவல் மூலம், நான் யார் என்று உணர்ந்து என்னை நெருக்கப்படுத்திக் கொண்டேன். புத்தகத்திற்கும், புத்தத்திற்கும் எதோ சம்மந்தம் உள்ளது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது. சாதி என்கிற அமைப்பு நம்மை இந்த பொறியில் சிக்க வைத்து வேறு எதுவும் யோசிக்கவிடாமல் நம்மை இதுக்குள்ளாகவே சுத்த வைக்கிறது.

விழிப்புணர்வை அடைவதுதான் விடுதலைக்கான ஒரே வழி, பிரிவினை அல்ல. எல்லா உயிர்களையும் சமம் என்று நினைக்கும் எங்கள் பாட்டி போதும். நான் ரஞ்சித்திடம் சேர்ந்த பிறகு என்னைப்போல் நிறைய பேர் இன்று பாட்டு எழுதுகிறார்கள். ஒரு கரு எப்படி வெளிவர தவிக்குமோ, அப்படிதான் நானும் தவிக்கிறேன், அந்த கருவில் இருந்து சமத்துவம் வெளியே வர வேண்டும் என்பதே என் எண்ணம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

சென்னை: சார்பட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய எழுத்தாளர் தமிழ்ப்பிரபாவின் "கோசலை" என்ற நாவலின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகை பார்வதி, பாடகர் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகை பார்வதி பேசியபோது, "தங்கலான் திரைப்படத்தில் நான் நடிக்க வரும்போது தமிழ்ப்பிரபா எனக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிக்கும் என் கதாபாத்திரத்திற்கு நான் மட்டுமே தகுதியானவர் என்றும் சொன்னார். ஒரு எழுத்தாளர் அப்படி சொல்வது அரிது. எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அதனால் நான் இன்னும் இந்த புத்தகத்தை படிக்கவில்லை. கண்டிப்பாக நான் படிக்கும் முதல் தமிழ்ப் புத்தகம் கோசலை புத்தகமாகத்தான் இருக்கும்.

சமூகத்தில் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். பெண்களை தேவைக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்காக இந்த கோசலை என்ற கதாபாத்திரம் போல, நிஜ வாழ்க்கையில் வந்தால் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்" என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது, "அம்பேத்கரிடம் நான் கொண்ட புரிதலை மற்றவர்களுக்கு சொல்வதற்காகத் தான் நான் சினிமாவிற்கு வந்தேன். அதற்காகத்தான் நீலம் நிறுவனத்தை ஆரம்பித்தேன். இந்த நாவலை படிக்க ஆரம்பித்தபோது எனக்கு நன்றாக தூக்கம் வந்தது. திரைப்படங்களைக் காட்டிலும் எழுத்துகள் மட்டுமே என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது.

நான் சிறுவயதில் கடைக்கு பந்து வாங்க சென்றபோது கடைக்காரரால் சாதி ரீதியாகப் பாதிக்கப்பட்டேன். உணர்வுகளை வெளிப்படுத்த எழுத்துகள் மட்டுமே உதவும். எனக்குள் உண்டான அழுத்தமே என் திரைப்படங்கள்.

பட்டியலின மக்களை சினிமாவில் காட்டுவதற்குக் கூட மாற்று எண்ணத்தை உருவாக்கிவிட்டோம். அவர்கள் சட்டை அணிய வேண்டுமா? காலணி போட வேண்டுமா? என்பதைப்போல. நாம் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டிய தேவை உள்ளது. அதை ஏற்கனவே நாம் உருவாக்கி உள்ளோம்" என்று கூறினார்.

பாடகர் அறிவு பேசியபோது, "கோசலை நாவலை சத்தமாக படித்ததால் என் தொண்டை கட்டிக் கொண்டது. என்னை சுற்றி வெறும் புத்தகங்கள் மட்டுமே இருக்கும். 'சிந்தனையாளன்' போன்ற புத்தகங்கள் இருக்கும். நான் படித்த ஒரு புத்தகத்தில் அதில் பெண்ணை நாயுடன் ஒப்பிட்டு எழுதியிருப்பார்கள். அதனால், நான் வாசிப்பதை நிறுத்த தொடங்கிவிட்டேன்.

ஒரு திரைப்படம் வெளியே வந்து, நம் கஷ்டங்களை வெளிக்கொண்டு வரும். நம் கதையைப் பேசும் ஒரு படம் வெளியே வருகிறது என்று நான் முதல் முதலில் பார்த்தது பா.ரஞ்சித் அவர்களின் திரைப்படம்தான். என் சிந்தனையைப் போன்று உள்ளது என்று பா.ரஞ்சித் அவர்களின் சிந்தனையால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்தான் நான். ஒரு சரியான புத்தகம் நமக்கு தருகின்ற அறிமுகம் ஒருநாளும் பொய்யாக போகாது.

இந்த நாவல் மூலம், நான் யார் என்று உணர்ந்து என்னை நெருக்கப்படுத்திக் கொண்டேன். புத்தகத்திற்கும், புத்தத்திற்கும் எதோ சம்மந்தம் உள்ளது என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது. சாதி என்கிற அமைப்பு நம்மை இந்த பொறியில் சிக்க வைத்து வேறு எதுவும் யோசிக்கவிடாமல் நம்மை இதுக்குள்ளாகவே சுத்த வைக்கிறது.

விழிப்புணர்வை அடைவதுதான் விடுதலைக்கான ஒரே வழி, பிரிவினை அல்ல. எல்லா உயிர்களையும் சமம் என்று நினைக்கும் எங்கள் பாட்டி போதும். நான் ரஞ்சித்திடம் சேர்ந்த பிறகு என்னைப்போல் நிறைய பேர் இன்று பாட்டு எழுதுகிறார்கள். ஒரு கரு எப்படி வெளிவர தவிக்குமோ, அப்படிதான் நானும் தவிக்கிறேன், அந்த கருவில் இருந்து சமத்துவம் வெளியே வர வேண்டும் என்பதே என் எண்ணம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் நடிக்கும் ஹாரர் திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.