ETV Bharat / state

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட கோரிக்கை

author img

By

Published : Apr 13, 2021, 11:02 PM IST

சென்னை: கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் எனவும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தட்டுபாடின்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும்
தட்டுபாடின்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும்

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின் போது முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். நவம்பர் மாதத்திற்கு பின் கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கியது.

பின்னர் தொழிற்சாலைகளுக்கு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், 45 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை அரசிடம் இருந்து வரவில்லை.

திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதேபோல் சென்னை மெட்ரோ ரயில், வாகன உதிரிபாக தொழிற்சாலை என புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 10 விழுக்காடு கூட அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவு பெறவில்லை.

கரோனா வீழ்ச்சியில் இருந்து தற்போது தான் தொழிற்துறை மீண்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் கரோனா இரண்டாம் அலை பரவ ஆரம்பித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக ஜவுளித்துறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் தினக்கூலி அடிப்படையில் தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல் சிறு குறு தொழிலாளர்களில் 80 விழுக்காடு பேர் 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் அனைவருக்கும் உடனே போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை அரசு தொடங்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முழுமையாக போய்சேரவில்லை. ஆகவே, அரசு முழு கவனம் செலுத்தி தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கூறும்போது, "18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது. உடனே தட்டுபாடின்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும். அதேபோல் குடிசை பகுதி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தட்டுபாடின்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும்

மேலும், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, "படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. தயக்கமின்றி 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.

அனைத்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ’ஸ்புட்னிக் V’ இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு அனுமதி

கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலின் போது முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். நவம்பர் மாதத்திற்கு பின் கரோனா பரவலின் தாக்கம் குறையத் தொடங்கியது.

பின்னர் தொழிற்சாலைகளுக்கு அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், 45 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தது. ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் 20 முதல் 40 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை அரசிடம் இருந்து வரவில்லை.

திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதேபோல் சென்னை மெட்ரோ ரயில், வாகன உதிரிபாக தொழிற்சாலை என புறநகர் பகுதிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 10 விழுக்காடு கூட அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நிறைவு பெறவில்லை.

கரோனா வீழ்ச்சியில் இருந்து தற்போது தான் தொழிற்துறை மீண்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் கரோனா இரண்டாம் அலை பரவ ஆரம்பித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக ஜவுளித்துறையில் பெரும்பாலான தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள் தினக்கூலி அடிப்படையில் தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல் சிறு குறு தொழிலாளர்களில் 80 விழுக்காடு பேர் 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே அவர்கள் அனைவருக்கும் உடனே போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியை அரசு தொடங்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முழுமையாக போய்சேரவில்லை. ஆகவே, அரசு முழு கவனம் செலுத்தி தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் கூறும்போது, "18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது. உடனே தட்டுபாடின்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும். அதேபோல் குடிசை பகுதி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தட்டுபாடின்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும்

மேலும், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, "படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. தயக்கமின்றி 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்றார்.

அனைத்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ’ஸ்புட்னிக் V’ இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டி ஆய்வகத்துக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.